பதிவு செய்த நாள்
13 ஜூலை2019
23:34
புதுடில்லி:ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியாவின், நிர்வாக இயக்குனர், அன்ஷுலா காந்த், உலக
வங்கியின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக
நியமிக்கப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைவர், டேவிட் மால்பாஸ்
இதை அறிவித்துள்ளார்.
இது குறித்து மால்பாஸ் மேலும் கூறியுள்ளதாவது:உலகவங்கி
குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக,
அன்ஷுலா காந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். வங்கி, நிதி, தொழில்நுட்ப
பிரிவுகளில் 35 ஆண்டு அனுபவம் அவருக்கு உள்ளது.கருவூலம், நிதி, செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் அவர் சிறந்து விளங்குகிறார்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
அன்ஷுலா
காந்த், தற்போது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், தலைமை நிதி
ஆலோசகராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டிலிருந்து இவர்,
இவ்வங்கியின் நிர்வாக இயக்குனராகவும், நிர்வாக குழு
உறுப்பினராகவும் உள்ளார்.இவரின் திறமையால், 3,800 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதி இருப்பும், 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும் இவ்வங்கியிடம் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|