பதிவு செய்த நாள்
29 ஜூலை2019
07:19
shyamsek@ithought.co.inமுதலீட்டாளர்கள் மனதில் தோன்றும் உணர்வுகளில், கோபம் மிக முக்கியமானது. கோபத்தை எப்படி கையாள்கிறோம் என்பது மிக முக்கியம். அதைப் பொறுத்து தான், முதலீட்டு வெற்றி- – தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
பல நேரங்களில், முதலீட்டு தோல்வி, வெற்றி ஆக மாறுவதும், கிடைக்க வேண்டிய வெற்றி, தோல்வியாக மாறுவதும், கோபத்தை எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்து அமைந்துவிடுகிறது. கோபம் ஏற்படுவது இயற்கை. எதிர்பார்ப்புகளை சரியாக ஏற்படுத்திக் கொள்ள தவறும்போது, தோன்றும் ஏமாற்றம், பெரும்பாலும் கோபமாக வெளிப்படும். இது, தவிர்க்க முடியாது. ஆனால், அந்த கோபத்தை எப்படிக் கையாள்வது என்பதில் தான், நம்முடைய முதலீட்டு வெற்றியின் ரகசியம் அடங்கி உள்ளது.முதலீட்டுப் பயணத்தில், நம் நடத்தையையும், எதிர்வினையையும் சார்ந்து தான், நாம் எடுக்கும் முடிவுகளின் தரம் அமையும்.
ஆகவே, அவை இரண்டும் சீராக அமைய, நமக்கு ஏற்படும் கோபத்தை சரியாக கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான புரிதலை வளர்ப்பது மிக முக்கியம்.கோபம் ஏற்பட, இரண்டு வகையான காரணங்களை சொல்லலாம். நம் சொந்த நடத்தை சார்ந்த காரணங்கள், ஒரு வகை. பிறர் நடத்தை சார்ந்த காரணங்கள், இரண்டாவது வகை. நம்மில் பெரும்பாலானோர், இரண்டாவது வகை கோபத்திலேயே நம் முதலீட்டு வாழ்க்கையை கடந்து விடுகிறோம்.கோபத்திற்கு நாம் காரண மாக இருக்கும் போது, அதைப்பற்றி அதிகம் நினைத்துக்கூட பார்க்க நாம் தயங்குவது உண்டு. பலருக்கு, தனக்குள் இருக்கும் ஒட்டு மொத்த கோபத்தையும் பிறரை நோக்கி செலுத்துவதே வாடிக்கையாக இருக்கும்.ஆனால், உண்மையில், பெரும்பாலான சூழல்களில், கோபத்திற்கு காரணமாக இருப்பது நாம் தான்.
எதிர்பார்ப்புகளை வடிவமைத்துக் கொள்வதில் ஏற்படும் கவனக் குறைவும், மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதில் நடக்கும் தவறு களும், ஏமாற்றத்தில் தான் முடியும். அந்த ஏமாற்றம் கோபமாக வெளிப்படும்.இதற்கு முதலில் நாம் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்படி பொறுப்பு ஏற்கும் போது, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கும் நாமே பொறுப்பு ஆகிறோம். ஆகவே, எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட முடிவுகளும், நடவடிக்கைகளும் நம் பொறுப்பு ஆகிவிடும்.பொறுப்பு ஒரு இடத்தில் தெளிவாக ஒப்படைக்கப்படும் போது, முடிவுகள் வேகமாகவும், விவேகத்துடனும் எடுக்க வாய்ப்பு அதிகம். பொறுப்பு ஏற்பது தான், ஒரு முதலீட்டாளர், தன் தோல்வியை வெற்றி ஆக மாற்றுவதன் முதல் படி.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற உடனடியான தேடலை துவங்க அது உதவும்.
மற்றவர்களை குறை சொல்வதால் கோபம் தணியலாம். ஆனால், எந்த தீர்வு நோக்கியும் நாம் நகர மாட்டோம். மாற்று முடிவோ அல்லது தீர்வு நோக்கிய நகர்வோ ஏற்படாமல், காலம் கடந்து விடும்.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. தவறை சரிசெய்ய, உடனடி வழிகளைத் தேடுவது மட்டுமே நமக்கு நன்மை தரும். முதலீட்டு வாழ்வில், நாம் செய்த தவறுகளை ஏற்க முன்வருவது மட்டுமே, அடுத்த கட்ட நகர்வின் ஆரம்பம். அதற்கான நேரம் வந்துவிட்ட தாகவே தோன்றுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|