சென்னையில் வீடுகள் விற்பனை 15 சதவீதம் அதிகரிப்பு சென்னையில் வீடுகள் விற்பனை 15 சதவீதம் அதிகரிப்பு ...  கிராமப்புற வங்கிகளின் புதிய பங்கு வெளியீடு கிராமப்புற வங்கிகளின் புதிய பங்கு வெளியீடு ...
‘சிப்’ உள்ள கார்டுகள் பாதுகாப்பானவையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
07:01

‘சிப் பொருத்தப்பட்ட ஏ.டி.எம்., கார்டு, கணக்கின் விபரங்களை, இயந்திரம் எளிதில் தெரிந்து கொள்ளவே தவிர, பாதுகாப்பானவை இல்லை’ என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களில், ‘ஸ்கிம்மர்’ எனும் ஏ.டி.எம்., கார்டு விபரங்களை திருடும் இயந்திரம் பொருத்தி, வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் சம்பவம், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ‘சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டின் விபரங்களை, திருட முடியாது என, பரவலான, ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், ’சிப்’ உள்ள கார்டு, முற்றிலும் பாதுகாப்பானதாக சொல்ல முடியாது என, கூறப்படுகிறது.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:கணக்கின் விபரங்களை உடனடியாகவும், எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், டெபிட் உள்ளிட்ட கார்டுகளில் சிப் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அட்டை மிகவும் பாதுகாப்பானது என நினைப்பது தவறானது. ஸ்கிம்மர் இயந்திரத்தால், எந்த அட்டையின் விபரங்களையும், எளிதில் திருட முடியும்.ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஸ்கிம்மர் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதில், வாடிக்கையாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மேலும், கார்டுகளில், பணம் எடுக்கக் கூடிய அளவை, வாடிக்கையாளர்களே நிர்ணயிக்க முடியும். அற்கான வசதி, அனைத்து வங்கிகளிலும் உள்ளன.

மேலும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையில், அந்த கார்டை, வாடிக்கையாளர்களே ‘ஸ்விட்ச் ஆப்’ செய்ய முடியும்.இது போன்ற, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)