பதிவு செய்த நாள்
30 ஜூலை2019
07:01

‘சிப் பொருத்தப்பட்ட ஏ.டி.எம்., கார்டு, கணக்கின் விபரங்களை, இயந்திரம் எளிதில் தெரிந்து கொள்ளவே தவிர, பாதுகாப்பானவை இல்லை’ என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களில், ‘ஸ்கிம்மர்’ எனும் ஏ.டி.எம்., கார்டு விபரங்களை திருடும் இயந்திரம் பொருத்தி, வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் சம்பவம், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ‘சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டின் விபரங்களை, திருட முடியாது என, பரவலான, ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், ’சிப்’ உள்ள கார்டு, முற்றிலும் பாதுகாப்பானதாக சொல்ல முடியாது என, கூறப்படுகிறது.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:கணக்கின் விபரங்களை உடனடியாகவும், எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், டெபிட் உள்ளிட்ட கார்டுகளில் சிப் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அட்டை மிகவும் பாதுகாப்பானது என நினைப்பது தவறானது. ஸ்கிம்மர் இயந்திரத்தால், எந்த அட்டையின் விபரங்களையும், எளிதில் திருட முடியும்.ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஸ்கிம்மர் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதில், வாடிக்கையாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மேலும், கார்டுகளில், பணம் எடுக்கக் கூடிய அளவை, வாடிக்கையாளர்களே நிர்ணயிக்க முடியும். அற்கான வசதி, அனைத்து வங்கிகளிலும் உள்ளன.
மேலும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையில், அந்த கார்டை, வாடிக்கையாளர்களே ‘ஸ்விட்ச் ஆப்’ செய்ய முடியும்.இது போன்ற, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|