பதிவு செய்த நாள்
03 ஆக2019
23:27
கேபிள், ‘டிவி’யின் மாதாந்திர கட்டணத்தை, 130 ரூபாயாகக் குறைத்துள்ளதால், அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்தின் நஷ்டம், பல மடங்கு உயரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அரசு கேபிள், ‘டிவி’ அதிகாரிகள் கூறியதாவது:விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதால், கேபிள், ‘டிவி’ கட்டணம் அதிகரித்தது. ‘டிராய்’ எனும் ஒழுங்கு முறை ஆணைய விதிகளை, அரசு கேபிள், ‘டிவி’ மீறாமல் பின்பற்றியது.இதனால், வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிட்டது.
இந்த நிலையில், தனியார் கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள், டிராய் விதிகளைப் பின்பற்றாமல், கட்டணத்தை அதிரடியாகக் குறைத்தன. இதனால், அரசு கேபிள், ‘டிவி’ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது.வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதற்காக, கேபிள், ‘டிவி’ மாதக் கட்டணம், 130 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
கட்டணத்தை அதிகமாகக் குறைத்திருப்பதால், அரசு கேபிள், ‘டிவி’க்கு அதிக நஷ்டம் ஏற்படும்.கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்தின் நஷ்டம், 80 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2019 – 20ல், 100 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டது. ஆனால், விலை குறைப்பு காரணமாக, நஷ்டம் மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|