பதிவு செய்த நாள்
13 ஆக2019
23:28
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், சற்று குறைந்து, 3.15 சதவீதமாக உள்ளது.இது, ஜூனில், 3.18 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, ஜூலையில், 4.17 சதவீதமாக அதிகரித்திருந்தது.
கணக்கீட்டு காலத்தில், உணவுப் பொருட்கள் விலை அதிகரித்திருந்தது. இதனால், சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.உணவுப் பொருட்கள் விலை, ஜூன் மாதத்தில், 2.25 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலையில், 2.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி, சில்லரை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கைகளை உருவாக்குகிறது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கைகளை அறிவித்து வருகிறது.தற்போது, ஜூலை மாத சில்லரை விலை பணவீக்க மானது, ரிசர்வ் வங்கியின் சவுகரியமான நிலைக்கு கீழே இருக்கிறது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடம், பணவீக்க விகிதத்தை, 4 சதவீதம் அளவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|