பதிவு செய்த நாள்
22 ஆக2019
06:39
திருப்பூர் : நாடு முழுவதும், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் இருந்து, ஜி.எஸ்.டி., குறித்த சர்வே, மேற்கொள்ளப்படுகிறது. சர்வே முடிவுகளை, மத்திய அரசின் பரிசீலனைக்காக, இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள் சங்கம், தொகுத்து வழங்க உள்ளது.
இது குறித்து, இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள் சங்கமான ஐ.சி.ஏ.ஐ.,யின் தென்னகச் செயலர், ஜலபதி, கூறியதாவது:துவக்கத்தில், தொழில்துறை தடுமாற்றங்களைச் சந்தித்தபோதும், தற்போது நிலைத்தன்மையைக் காட்டி வருகிறது. வர்த்தகத்தில் எளிமை, அரசு அதிகாரிகளுடன் தொடர்பு குறைப்பு மற்றும் இணக்கமான சூழல், ஜி.எஸ்.டி,யால் உருவாகிஉள்ளது. ஜி.எஸ்.டி.,யின் சாதனைகள், குறைகள் குறித்து, சர்வே செய்வதற்கும், இதன் பலனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் உரிய தருணம் இது.
வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்வதற்கு ஏற்ப, http://idtc.icai.org/cc/apps/survey.php என்ற இணையதள முகவரியில், வரும், 31ம் தேதிக்குள், ஜி.எஸ்.டி., குறித்த கருத்துகளை பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் மற்றும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள் தெரிவிக்கலாம்.இவ்வாறு, ஜலபதி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|