தங்கம் விலை புது உச்சம்: சவரன் ரூ.304 உயர்வுதங்கம் விலை புது உச்சம்: சவரன் ரூ.304 உயர்வு ...  வீட்டில் இருந்து வேலை என்.டி.பி.சி., அறிமுகம் வீட்டில் இருந்து வேலை என்.டி.பி.சி., அறிமுகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
காளைப் பாய்ச்சலில் பங்குச் சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2019
03:19

மும்பை : நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளான, ‘மும்பை பங்குச் சந்தை’ மற்றும், ‘தேசிய பங்குச் சந்தை’ ஆகியவற்றின் குறியீடுகள், கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், நேற்று உயர்வை கண்டன.கடந்த வெள்ளியன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக, அன்னிய முதலீட்டாளர்கள் வருமானம் மீதான கூடுதல் வரியை திரும்ப பெறுவது, ஜி.எஸ்.டி.,யை எளிமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.இதையடுத்து, இந்த அறிவிப்புகளால், நேற்று பங்குச் சந்தைகள் உயர்வை கண்டன. சென்செக்ஸ், 793 புள்ளிகள் அதிகரித்தது. நிப்டி, 229 புள்ளிகள் அதிகரித்தது.ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரி கிடையாது; வீடு, வாகன கடன் வட்டி குறையும்; பொதுத்துறை வங்கிகளுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் வழங்கப்படும் என்பன போன்ற நிதியமைச்சரின் அறிவிப்புகள், சந்தை எழுச்சிக்கு அடித்தளமிட்டன.


மேலும், அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக மோதல் குறித்த பேச்சில், முன்னேற்றம் இருந்ததாக வந்த செய்திகளும், சந்தைக்கு ஊக்கத்தை வழங்கின.சென்செக்ஸ், சந்தை துவக்கத்தின் போதே, 663 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ், 792.96 புள்ளிகள் அதிகரித்து, 37494.12 புள்ளிகளில் நிலைபெற்றது.நிப்டி, வர்த்தக முடிவில், 228.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 11057.85 புள்ளிகளில் நிலைபெற்றது.சென்செக்ஸ், நிப்டி இரண்டுமே, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.



மேலும், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, பங்குச் சந்தை கண்ட அதிக உயர்வும் இதுதான். சென்செக்சில், நேற்றைய வர்த்தகத்தில் அதிக லாபம் கண்ட நிறுவனம், யெஸ் பேங்க் ஆகும்.இதையடுத்து, எச்.டி.எப்.சி., பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ. சி.ஐ., பேங்க், எல் அண்டு டி., – எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் பேங்க், கோட்டக் பேங்க் ஆகியவை உயர்வைக் கண்டன.மாறாக, டாடா ஸ்டீல், சன்பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள், 2.01 சதவீதம் வரையிலான சரிவை கண்டன.


பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, பங்குச் சந்தை கண்ட அதிக உயர்வு இதுதான்.ரூ.2.41 லட்சம் கோடி அதிகரிப்புபங்குச் சந்தைகளில் நேற்று உயர்வு காணப்பட்டதை அடுத்து, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு, 2.41 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது. 30 பங்குகளின் தொகுப்பான, சென்செக்ஸ் குறியீட்டில், 22 பங்குகள் லாபத்துடன் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தையில், நேற்று,1,705 பங்குகள் முன்னேற்றத்தையும், 811 பங்குகள் பின்னடைவையும், 123 பங்குகள் மாற்றமின்மையையும் சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)