பதிவு செய்த நாள்
04 செப்2019
23:20
வங்கிகள் வழங்கிய,பி.ஓ.எஸ்., எனும், ’பாயின்ட் ஆப் சேல்’ சாதனத்தின் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலிருந்து, நாள் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் வரை, பணம் எடுக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:பி.ஓ.எஸ்., இயந்திரத்தில், டெபிட் கார்டை தேய்த்து பணம் எடுக்கும் வசதி பல ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்டது.அது, கிராமம், நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, மதுரை, கோவை, போன்ற நகரங்களில் அந்த வசதியை அதிகப்படுத்த, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அறிவுறுத்தி உள்ளது.
பி.ஓ.எஸ்., இயந்திரம் வைத்திருக்கும் வணிக நிறுவனங்களுக்கு, பணம் வழங்கும் உரிமையை அதிகமாக வழங்க வேண்டும்.அது தொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறி உள்ளது.பி.ஓ.எஸ்., வாயிலாக ஓர் நாளில், 2,000 ரூபாய் வரை பணம் எடுக்க முடியும். இதற்கு, அதிக பட்சமாக, 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
–நமது நிருபர்–
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|