பதிவு செய்த நாள்
06 செப்2019
01:00
புதுடில்லி:வீடு, தனிநபர் உள்ளிட்ட, சில்லரை கடன்களுக்கு, 59 நிமிடங்களில், கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கும் திட்டத்தை, பொதுத்துறை வங்கிகள் துவங்கி உள்ளன.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 59 நிமிடங்களில் கடன் வழங்குவதற்காக துவங்கப்பட்ட தளத்தில், தற்போது வீடு, தனிநபர் உள்ளிட்ட சில்லரை கடன்களும் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கடன் வசதியை, வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் உள்ளிட்ட, 19 பொதுத்துறை வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக, ’பி.எஸ்.பி., லோன்ஸ் இன் 59 மினிட்ஸ்’ எனும் இணைய தள வசதி உள்ளது.இதில் தேவைப்படும் தகவல்களை வாடிக்கையாளர்கள் வழங்கிய, 59 நிமிடங்களில், கடன் வழங்குவது குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுவிடும்.முதற்கட்டமாக வீடு, தனிநபர் கடன்களுக்கு மட்டும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், வாகன கடனும் வழங்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|