பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக உயரும் அடுத்த ஆண்டின் நிலை குறித்து, ‘பிட்ச்’ ஆய்வறிக்கை பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக உயரும் அடுத்த ஆண்டின் நிலை குறித்து, ... ...  ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை குறைக்கும் உலக, உள்நாட்டு தரகு நிறுவனங்கள்கணிப்பு ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை குறைக்கும் உலக, உள்நாட்டு தரகு ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் இணைப்பு: தீர்மானங்களை நிறைவேற்ற மும்முரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2019
23:45

வங்கிகள் இணைப்பு தொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் வங்கி; யுனைடெட் இந்தியா வங்கி இணைக்கப்படும். கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படும்; யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி இணைக்கப்படும், இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில் அறிவித்தார்.



இந்த அறிவிப்பை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா இரண்டும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளன.



இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகள் இணைப்புக்கு, சம்பந்தப்பட்ட வங்கிகள் முதலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அதன் பின் தான், வங்கிகள் இணைப்பு சாத்தியப்படும். இதன் முதல் கட்டமாக, பஞ்சாப் நேஷனல் வங்கியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும், இதர இரண்டு வங்கிகளை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக, தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.


இதே போல, இணைய உள்ள வங்கிகளும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன் பின், வங்கிகளின் வாரியம் ஆலோசனை நடத்தி, வங்கிகள் இணைப்பிற்கான அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.வரும், 13ம் தேதி, கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும், தீர்மானம் நிறைவேற்ற உள்ளன. இந்தியன் வங்கி, 18ம் தேதி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிய வருகிறது.



அனைத்து வங்கிகளும், இணைப்புக்கான தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.இதனால், வங்கிகள் இணைப்புக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. வரும், 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல், வங்கிகள் இணைப்பு செயல்பாட்டுக்கு வரலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)