பதிவு செய்த நாள்
11 செப்2019
23:45
வங்கிகள் இணைப்பு தொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் வங்கி; யுனைடெட் இந்தியா வங்கி இணைக்கப்படும். கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படும்; யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி இணைக்கப்படும், இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா இரண்டும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளன.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகள் இணைப்புக்கு, சம்பந்தப்பட்ட வங்கிகள் முதலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அதன் பின் தான், வங்கிகள் இணைப்பு சாத்தியப்படும். இதன் முதல் கட்டமாக, பஞ்சாப் நேஷனல் வங்கியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும், இதர இரண்டு வங்கிகளை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக, தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
இதே போல, இணைய உள்ள வங்கிகளும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன் பின், வங்கிகளின் வாரியம் ஆலோசனை நடத்தி, வங்கிகள் இணைப்பிற்கான அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.வரும், 13ம் தேதி, கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும், தீர்மானம் நிறைவேற்ற உள்ளன. இந்தியன் வங்கி, 18ம் தேதி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிய வருகிறது.
அனைத்து வங்கிகளும், இணைப்புக்கான தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.இதனால், வங்கிகள் இணைப்புக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. வரும், 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல், வங்கிகள் இணைப்பு செயல்பாட்டுக்கு வரலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|