பதிவு செய்த நாள்
17 செப்2019
06:39
புதுடில்லி : ‘முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்தது, முற்றிலும் எதிர்பாராதது’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:முதல் காலாண்டு முடிவு, முற்றிலும் எதிர்பாராதது. கடந்த சில மாதங்களாக மந்த நிலை காணப்படுவதால், பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது. தற்போதைய பொருளாதார நிலையை சரிசெய்வது என்பது, தொடர்ச்சியான ஒன்றாகும். கட்டுமான தொழிலுக்கு சலுகை, ஏற்றுமதி ஊக்கத்தொகை, வங்கிகள் ஒருங்கிணைப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வாகன துறைக்கு ஊக்கச் சலுகை அறிவிப்புகள் என, சில நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.
அடுத்து, விவசாயத்தை சந்தைப்படுத்துதல் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக, அரசாங்கத்திடமிருந்து சில நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறேன்.அனைத்து முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம், இரண்டாவது காலாண்டில், முதல் காலாண்டை விட குறைவாக உள்ளது. இதற்காக, உலக மந்த நிலையை வைத்து, நமது நிலையை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இருப்பினும், உலகளாவிய மந்த நிலை, வளர்ச்சியை பாதிக்கிறது.
இரண்டாவது காலாண்டில், பல்வேறு காரணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ரிசர்வ் வங்கி பகுப்பாய்வு செய்து, மதிப்பீடு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|