பதிவு செய்த நாள்
27 செப்2019
03:41
சென்னை: –‘‘வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஏராளமான புதிய பொருட்கள், வியத்தகு நிதியுதவிகளை, ‘அமேசான்’ அறிமுகப்படுத்த உள்ளது; அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ‘‘அனைத்து தரப்பு மக்களுக்கும் அவை ஏற்றதாக இருக்கும்,’’ என, அமேசான் நிறுவனத்தின், கேட்டகரி மேனேஜ்மென்ட் துணைத் தலைவர், மணிஷ் திவாரி கூறினார்.
அவர் அளித்துள்ள பேட்டி:பண்டிகை காலத்திற்கு, அமேசான் எவ்வாறு தயாராகி வருகிறது?வரவிருக்கும் பண்டிகை காலத்தை, நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்க காத்திருக்கிறோம். எங்களின் இணையதளத்திலிருந்து ஏராளமான பொருட்களை, கருவிகளை, வீட்டிற்கு தேவையானவற்றை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். குறிப்பாக, வீட்டு உபயோகம் மற்றும் சமையலறை பொருட்கள், பேஷன், கருவிகள், ஸ்மார்ட் போன்கள் என, ஏராளமானவற்றை, ‘ஷாப்பிங்’ செய்ய முடியும். பாரம்பரியமாகவே, இந்த பண்டிகை காலத்தில் தான் பிரபலமான, ‘பிராண்ட்’ நிறுவனங்களும், விற்பனையாளர்களும் புதிய பொருட்களை அறிமுகம் செய்வர். எனவே, எங்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள், மிகச் சிறப்பான பொருட்களை, பல விதமான பிரிவுகளில் தேர்ந்தெடுக்க முடியும். மேலும் நாங்கள், விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் பொருட்களை எவ்வாறு, அமேசானில் விற்க முடியும் என்பதை தெரிவித்து, அந்த பொருட்களை விற்க உறுதுணையாக இருக்கிறோம்.
குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்களுக்கு ஊக்கம் அளிக்கிறோம். கைவினைப் பொருட்கள் தயாரிப்புகளை விற்கும் விற்பனையாளர்கள், பாரம்பரியமான கைத்தறி துணிகளை விற்பவர்கள், கலாசாரத்தை போற்றும் சேலை மற்றும் பொருட்களும் இவற்றில் அடங்கும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் பண்டிகை காலத்தை, அமேசான் எவ்வாறு எதிர்பார்க்கிறது. என்ன இலக்கு நிர்ணயித்துள்ளீர்கள்?எங்களின் அமேசான் இணையதளத்தை, இந்த ஆண்டு, மேலும் அதிகமானோர் பயன்படுத்துவர் என, எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, புதிய வாடிக்கையாளர்கள் எங்களிடம் வருவர் என, நம்புகிறோம். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில், கூடுதலாக, 1.5 லட்சம் விற்பனையாளர்களை இணைத்துள்ளோம். இதனால், எங்களின், இணையதளத்தின் மூலம், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், அவர்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுக்க முடியும். புதிய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர், இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து வருவர் என, நம்புகிறோம். மொபைல் போன் மூலம் எங்களின் இணையதளத்தை பார்வையிட்டு, பொருட்களை தேர்வு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த பண்டிகை காலத்தில், அனைவரும் எளிதாக வாங்கும் விலையில், பொருட்களை விற்பனை செய்ய, என்ன ஏற்பாடுகள் செய்துள்ளீர்கள்?வாடிக்கையாளர்கள் விரும்பும் தேவைக்கு ஏற்ற வகையில், பொருட்களை தேர்வு செய்ய வசதியான வகையில், பல ஏற்பாடுகளை செய்துள்ளோம். புதிய பிராண்டுகள் பல இடம் பெற உள்ளன. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பொருட்களுக்கு நிதியுதவி அளிப்போரும் ஏராளமாக உள்ளனர். இப்போதைய நிலையில் எங்களின் வாடிக்கையாளர்களில், இருவரில் ஒருவர், ‘கிரெடிட், டெபிட், பஜாஜ் பைனான்ஸ்’ போன்றவற்றின், மாத தவணை முறையில் தான் பொருட்களை வாங்குகின்றனர்.அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, பல விதமான நிதி திட்டங்கள் உள்ளன.அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும், அமேசானின், ‘தி கிரெட் இந்தியன் பெஸ்டிவல்’ ஆபர், 26ம் தேதி துவங்குகிறது. அதன் தலைப்பு, ‘இந்தியாவின் கொண்டாட்டத்தை, இப்போது, பட்ஜெட் தடுத்து நிறுத்தாது’ என்பதாக இருக்கும். மேலும், எங்களின் கொண்டாட்டத்தில், ‘டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில், நோ காஸ்ட் இ.எம்.ஐ., பஜாஜ் பின்செர்வ் நிதியுதவி, எஸ்.பி.ஐ., கார்டுகளுக்கு உடனடியாக, 10 சதவீத தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆபர்கள் என, பல உள்ளன. இதை, பெரிய திருவிழாவாக கொண்டாட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|