உலகின், ‘டாப் – 1௦’ பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி உலகின், ‘டாப் – 1௦’ பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி ...  வாகன துறை எதிர்காலம் பண்டிகை தீர்மானிக்கும் வாகன துறை எதிர்காலம் பண்டிகை தீர்மானிக்கும் ...
பண்டிகை கால, ‘ஷாப்பிங்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2019
03:41

சென்னை: –‘‘வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஏராளமான புதிய பொருட்கள், வியத்தகு நிதியுதவிகளை, ‘அமேசான்’ அறிமுகப்படுத்த உள்ளது; அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ‘‘அனைத்து தரப்பு மக்களுக்கும் அவை ஏற்றதாக இருக்கும்,’’ என, அமேசான் நிறுவனத்தின், கேட்டகரி மேனேஜ்மென்ட் துணைத் தலைவர், மணிஷ் திவாரி கூறினார்.

அவர் அளித்துள்ள பேட்டி:பண்டிகை காலத்திற்கு, அமேசான் எவ்வாறு தயாராகி வருகிறது?வரவிருக்கும் பண்டிகை காலத்தை, நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்க காத்திருக்கிறோம். எங்களின் இணையதளத்திலிருந்து ஏராளமான பொருட்களை, கருவிகளை, வீட்டிற்கு தேவையானவற்றை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். குறிப்பாக, வீட்டு உபயோகம் மற்றும் சமையலறை பொருட்கள், பேஷன், கருவிகள், ஸ்மார்ட் போன்கள் என, ஏராளமானவற்றை, ‘ஷாப்பிங்’ செய்ய முடியும். பாரம்பரியமாகவே, இந்த பண்டிகை காலத்தில் தான் பிரபலமான, ‘பிராண்ட்’ நிறுவனங்களும், விற்பனையாளர்களும் புதிய பொருட்களை அறிமுகம் செய்வர். எனவே, எங்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள், மிகச் சிறப்பான பொருட்களை, பல விதமான பிரிவுகளில் தேர்ந்தெடுக்க முடியும். மேலும் நாங்கள், விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் பொருட்களை எவ்வாறு, அமேசானில் விற்க முடியும் என்பதை தெரிவித்து, அந்த பொருட்களை விற்க உறுதுணையாக இருக்கிறோம்.

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்களுக்கு ஊக்கம் அளிக்கிறோம். கைவினைப் பொருட்கள் தயாரிப்புகளை விற்கும் விற்பனையாளர்கள், பாரம்பரியமான கைத்தறி துணிகளை விற்பவர்கள், கலாசாரத்தை போற்றும் சேலை மற்றும் பொருட்களும் இவற்றில் அடங்கும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் பண்டிகை காலத்தை, அமேசான் எவ்வாறு எதிர்பார்க்கிறது. என்ன இலக்கு நிர்ணயித்துள்ளீர்கள்?எங்களின் அமேசான் இணையதளத்தை, இந்த ஆண்டு, மேலும் அதிகமானோர் பயன்படுத்துவர் என, எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, புதிய வாடிக்கையாளர்கள் எங்களிடம் வருவர் என, நம்புகிறோம். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில், கூடுதலாக, 1.5 லட்சம் விற்பனையாளர்களை இணைத்துள்ளோம். இதனால், எங்களின், இணையதளத்தின் மூலம், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், அவர்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுக்க முடியும். புதிய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர், இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து வருவர் என, நம்புகிறோம். மொபைல் போன் மூலம் எங்களின் இணையதளத்தை பார்வையிட்டு, பொருட்களை தேர்வு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த பண்டிகை காலத்தில், அனைவரும் எளிதாக வாங்கும் விலையில், பொருட்களை விற்பனை செய்ய, என்ன ஏற்பாடுகள் செய்துள்ளீர்கள்?வாடிக்கையாளர்கள் விரும்பும் தேவைக்கு ஏற்ற வகையில், பொருட்களை தேர்வு செய்ய வசதியான வகையில், பல ஏற்பாடுகளை செய்துள்ளோம். புதிய பிராண்டுகள் பல இடம் பெற உள்ளன. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பொருட்களுக்கு நிதியுதவி அளிப்போரும் ஏராளமாக உள்ளனர். இப்போதைய நிலையில் எங்களின் வாடிக்கையாளர்களில், இருவரில் ஒருவர், ‘கிரெடிட், டெபிட், பஜாஜ் பைனான்ஸ்’ போன்றவற்றின், மாத தவணை முறையில் தான் பொருட்களை வாங்குகின்றனர்.அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, பல விதமான நிதி திட்டங்கள் உள்ளன.அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும், அமேசானின், ‘தி கிரெட் இந்தியன் பெஸ்டிவல்’ ஆபர், 26ம் தேதி துவங்குகிறது. அதன் தலைப்பு, ‘இந்தியாவின் கொண்டாட்டத்தை, இப்போது, பட்ஜெட் தடுத்து நிறுத்தாது’ என்பதாக இருக்கும். மேலும், எங்களின் கொண்டாட்டத்தில், ‘டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில், நோ காஸ்ட் இ.எம்.ஐ., பஜாஜ் பின்செர்வ் நிதியுதவி, எஸ்.பி.ஐ., கார்டுகளுக்கு உடனடியாக, 10 சதவீத தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆபர்கள் என, பல உள்ளன. இதை, பெரிய திருவிழாவாக கொண்டாட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)