பதிவு செய்த நாள்
28 செப்2019
06:08
புதுடில்லி : பொதுத் துறை நிறுவனங்கள் வசம் இருக்கும் உபரி நிலங்களை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில், சர்வதேச ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க உள்ளது மத்திய அரசு.
பொதுத் துறை நிறுவனங்கள் வசம், அதன் முக்கிய தேவைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் உபரி நிலங்களை விற்பனை செய்ய, அரசு விரும்புகிறது.இதன் தொடர்ச்சியாக, விற்பனைக்கு உதவும் வகையில், சர்வதேச அளவிலான ஆலோசனை நிறுவனம் ஒன்றை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிந்துள்ள நிலையில், அதை சரி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிதியாதாரம் தேவைகார்ப்பரேட் வரிச் சலுகைகளில் இருந்து ஆரம்பித்து, குறைவான வட்டிக்கு கடன் வழங்குவது வரையில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இவை அனைத்துக்கும் அரசுக்கு நிதியாதாரம் தேவைப்படுகிறது.எனவே, பொதுத் துறை நிறுவனங்களிடம் இருக்கும் உபரி நிலங்களை பயன்படுத்திக் கொள்ள, அரசு முடிவு செய்துள்ளது.இந்த நிதியை, பல்வேறு புதிய புதிய வழிகளின் மூலம் திரட்டும் முயற்சியில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நிலங்களை விற்பனை செய்வது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொள்ள, சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நியமிக்க இருக்கிறது.முதற்கட்டமாக, நிறுவனங்களிடம் அதன் முக்கிய பயன்பாட்டில் இல்லாத, கூடுதலாக இருக்கும் உபரி நிலங்கள் குறித்த பட்டியலை, ‘நிடி ஆயோக்’ தயாரிக்கும். ஒரு நிறுவனத்தின் வசம் உபரி நிலம் இருந்தால், அந்த நிறுவனம் எந்த துறையை சார்ந்திருக்கிறதோ, அந்த துறை அமைச்சகத்துடன், நிடி ஆயோக் கலந்து பேசி, விற்பனை குறித்து முடிவு செய்யும்.நிலங்கள் குறித்த பட்டியலை முடிவு செய்த பின், அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்.
பிரச்னைகள் இல்லாத நிலங்கள், தெளிவு ஏற்படாத நிலங்கள், வில்லங்கங்கள் இருக்கும் நிலங்கள் என, மூன்றாக வகைப்படுத்தப்படும்.மாநில அரசுமேலும், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, பல்வேறு வகையான சிக்கல்கள் கொண்ட இடங்களும் இருக்கின்றன.முன்பு மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் அரசே இருந்த காரணத்தால், பல நிறுவனங்களில் மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்கள், உரிமைகள் போன்ற விஷயங்களில், அதன் எல்லைகள் தெளிவுபடுத்தப்படாமல் போய்விட்டன.
உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒரு மாநிலத்தின் நிலத்தில் செயல்படுவதாலேயே, அந்த நிறுவனம், மாநில அரசின் கீழ் உள்ள நிறுவனம் என்பது போல் கருதப்படும் நிலையும் இருக்கிறது.இவை அனைத்தையும் சரி செய்து, விற்பனையை நிர்வகிக்க, சர்வதேச ஆலோசனை நிறுவனத்தை நியமிப்பது அவசியம் என, மத்திய அரசு கருதுகிறது.இந்த திட்டம் இன்னும் ஓராண்டுக்குள் தெளிவாக உருவாக்கப்பட்டு விடும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில், நல்ல பலனை நாட்டுக்கு வழங்கக் கூடியதாக உருவெடுத்து விடும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|