பதிவு செய்த நாள்
04 அக்2019
01:08
புதுடில்லி:வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், மேலும் பல அறிவிப்புகள் வர இருப்பதாக, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.
டில்லியில், உலக பொருளாதார மன்றத்தின் சார்பில், இந்திய பொருளாதார மாநாடு நடைபெறுகிறது. இதில், அரசு மற்றும் தனியார் துறை தலைவர்கள் பங்கேற்று, கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.இதில் பங்கேற்ற அமிதாப் காந்த், மேலும் கூறியதாவது:பொருளதார வளர்ச்சியை துாண்டும் வகையில், மேலும் பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை, வரும் நாட்களில் மத்திய அரசு மேற்கொள்ள இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம், 7.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், 8.1 சதவீதமாக உயர்ந்தது.
இருப்பினும், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான, முதல் காலாண்டில் வளர்ச்சியானது, 5 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த ஆண்டில் இதுவரை ரிசர்வ் வங்கி, அதன் ரெப்போ விகிதத்தை, 1.10 சதவீதம் அளவுக்கு குறைத்து அறிவித்துள்ளது.இருப்பினும், ரிசர்வ் வங்கியால் ஓரளவுக்கு மட்டுமே அதன் நிதிக் கொள்கைகளை தளர்த்த முடியும். எனவே, மத்திய அரசு இறங்கி, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளுக்கு மறு மூலதனம் வழங்குவது, வங்கிகளை இணைப்பது, ஏற்றுமதிக்கான சலுகைகள், கார்ப்பரேட் வரியை குறைத்தது என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கட்டமைப்பு சம்பந்தமான இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என, நான் கருதுகிறேன். மேலும், பொதுத் துறை நிறுவன பங்கு விலக்கலுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது.எங்களைப் பொறுத்தவரை, புதிதாக ஏற்படுத்தும், ‘கிரீன்பீல்டு’ திட்டங்களுக்கு பதிலாக, இருப்பதை மாற்றி அமைக்கும், ‘பிரவுன்பீல்டு’ திட்டங்களுக்குள் முதலீட்டாளர்கள் வர வேண்டும்.
அரசானது வசதிகளை வழங்குபவராகவும், ஊக்கப்படுத்தும் ஒரு அமைப்பாகவும் இருக்க வேண்டும். கூடவே, அது வணிகத்திலிருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்ளவும் வேண்டும்.இவ்வாறு அமிதாப் காந்த் கூறினார்.கடந்த ஐந்து ஆண்டுகளில், வணிகத்தை எளிதாக்குவதற்கு அரசு தீவிரமாக செயல்பட்டுள்ளது. ஐந்து டிரில்லியன் டாலர் அதாவது, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக இந்தியாவை, 2024ல் மாற்றும் இலக்கை அடைய, சாதகமான நிலைமைகள் உள்ளன.
குருபிரசாத் மொகபத்ராசெயலர், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறைபொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, தொழில் துறைக்கு அதிக ஊக்கத்தை அரசு அளிக்க வேண்டும்; அத்துடன், தனிநபர் வரி விகிதங்களையும் குறைக்க வேண்டும். இது, நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றாலும், அரசு இந்த நடவடிக்கையை நிச்சயம் எடுக்க வேண்டும்.
அதி கோத்ரேஜ்தலைவர், ‘கோத்ரேஜ்’ குழுமம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|