பதிவு செய்த நாள்
25 அக்2019
04:37
புதுடில்லி: அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை எளிமையாக்குவது குறித்து, அமைச்சகங்கள் மட்டத்திலான ஒரு குழு ஆராய உள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை மேலும் எளிமைப்படுத்துவது குறித்து, 29ம் தேதியன்று, அமைச்சகங்கள் மட்டத்திலான கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் செயலர் குருபிரசாத் மகோபத்ரா தலைமை தாங்குகிறார்.பாதுகாப்பு, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இக்கூட்டத்தில் கொள்கையை எளிமையாக்குவது, மேலும் எந்தெந்த துறைகளில் முதலீடுகளை ஈர்க்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கபட உள்ளது.அரசின் முன் அனுமதி எதுவும் இல்லாமல் தானியங்கி வழி மூலம் பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், சில துறைகளில் முன் அனுமதி தேவைப்படுகிறது.குறிப்பாக, பாதுகாப்பு, தொலைதொடர்பு, ஊடகம், மருந்து போன்ற சில துறைகளில் அனுமதி பெற்ற பிறகே, முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன.லாட்டரி, சூதாட்டம் மற்றும் பந்தயம், சிட் பண்டுகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், அணுசக்தி மற்றும் ரயில்வே உள்ளிட்ட மொத்தம், ஒன்பது துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|