பதிவு செய்த நாள்
03 நவ2019
23:56
அஞ்சலக
சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், மொபைல் வங்கி சேவையை
பயன்படுத்தும் வகையில், இந்தியா போஸ்ட் மொபைல் பாங்கிங் செயலிஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல்
துறை பேமெண்ட்ஸ் வங்கி சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள,
‘ஐபிபிபீ’ எனும் இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில்
டவுன்லோடு செய்து
பயன்படுத்தலாம்.இந்த செயலி மூலம் பரிவர்த்தனை
செய்ய, வாடிக்கையாளர்கள் கோர்
பாங்கிங் வசதி கொண்ட அஞ்சலக
கிளையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்த வசதியை
பயன்படுத்த பொருத்தமான லாகின் மற்றும் இணைய வங்கிச் சேவை வசதி
பெற்றிருக்க வேண்டும். இணைய வங்கிச் சேவை இயக்கப்படவில்லை எனில்,
முதலில் அதை இயக்கி விட்டு, பின்னர் மொபைல் வங்கி சேவையை அணுக வேண்டும்.
மொபைல்
வங்கி சேவைக்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம்,
இந்த வசதியை பெறலாம். இதற்கு, கே.ஓய்.சி., நடைமுறையை பூர்த்தி
செய்திருக்க வேண்டும்.
இந்த செயலி வாயிலாக, சேமிப்பு கணக்கு
தொடர்பான, மினி ஸ்டேட்மெண்ட் பெறலாம். சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு
நிதி கணக்கு விபரங்களை பெறலாம். பி.பி.எப்., தொகை செலுத்தலாம். மற்ற சேமிப்பு கணக்கு பயனாளிகளுக்கு பணம் அனுப்பலாம். பில் தொகை போன்றவற்றையும் செலுத்த முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|