பதிவு செய்த நாள்
04 நவ2019
00:02
நீண்ட கால பார்வை அடிப்படையில், சிறுசேமிப்பு திட்ட முதலீட்டை தீர்மானிப்பது பொருத்தமாக இருக்கும்.
பங்குச்
சந்தையின் ஏற்ற, இறக்கமான போக்கு, டெப்ட் பண்ட் முதலீடு தொடர்பான
சிக்கல் போன்ற காரணங்களினால், அஞ்சலக வைப்பு நிதி, பி.பி.எப்.,
உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்ட முதலீடு ஈர்ப்புடையதாக அமைந்துள்ளன. பொதுவாகவே,
சராசரி முதலீட்டாளர்கள், சிறுசேமிப்பு திட்ட முதலீடுகளை நாடும்
பழக்கம் கொண்டுள்ள நிலையில், பங்கு முதலீடு மற்றும் சமபங்கு
மியூச்சுவல் பண்ட் முதலீடு தரும் பலன்கள் சரிந்திருக்கும் சூழலில்,
சிறுசேமிப்பு திட்டங்கள் அளிக்கும் பலன், மேம்பட்டதாக
அமைந்துள்ளது.
இதனிடையே, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி
விகிதம் வரும் காலாண்டிற்கு மாற்றம் இல்லாமல் தொடர்வதும் சாதகமாக
அமைந்துள்ளது. எனவே, பெரும்பாலானமுதலீட டாளர் கள், சிறுசேமிப்பு
திட்டங்களில் முதலீடு செய்வதை பொருத்தமானதாக கருதுகின்றனர். ஏப்ரல்
முதல், ஜூலை வரையான காலத்தில், இந்த பிரிவில் முதலீடு, 37 சதவீதம்
அதிகரித்து இருக்கிறது. எனினும், முதலீட்டாளர்கள் நீண்ட கால
பார்வையை கொண்டிருப்பது அவசியம்.
கால அளவு
சிறுசேமிப்பு
திட்டங்கள் பல்வேறு கால அளவிலான முதலீடு வாய்ப்புகளை கொண்டுள்ளன.
வைப்பு நிதி திட்டங்கள் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும்
ஐந்தாண்டுகளுக்கு முதலீடு
செய்யலாம். தேசிய சேமிப்புசான்றிதழ் ஐந்தாண்டு காலம்கொண்டவை.கிசான்
விகாஸ்
பத்திரங்கள், 113 மாதங்கள் கொண்டவை. பி.பி.எப்., நீண்ட கால
திட்டமாகும். குறுகிய கால முதலீடுகள் எனில், அஞ்சலக வைப்பு நிதியை
நாடலாம். வங்கி வைப்பு நிதியை பரிசீலிப்பதும் பொருத்தமாக
இருக்கும்.
ஐந்தாண்டுகளுக்கு மேலான நீண்ட கால இலக்குகள் எனில்,
சமபங்கு முதலீடு இருப்பது
அவசியம் என, வலியுறுத்தப்படுகிறது.
பங்கு முதலீடு ஏற்ற, இறக்கம் கொண்டது என்றாலும், நீண்ட கால நோக்கில்
நல்ல பலன் அளிப்பதாக கருதப்படுகிறது.மேலும், நீண்ட கால முதலீடு
பணவீக்கத்தை மிஞ்சும் பலன் அளிக்கும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்
என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலித்து,
சிறுசேமிப்பு முதலீடுகளின் அளவை தீர்மானிக்கலாம்.
முதலீடு
செய்யும் போது, அதன் பணமாக்கும் தன்மையையும் மனதில் கொள்ள
வேண்டும். பொதுவாக சிறுசேமிப்பு திட்டங்கள், குறைந்த பணமாக்கும்
தன்மை கொண்டவை. இவற்றுக்கு லாக் இன் காலம் உண்டு. லாக் இன் காலம்
ஏற்புடையதா? என, பரிசீலித்த பின் முதலீடு செய்ய வேண்டும்.
பணமாக்கும் தன்மை
இடைப்பட்ட
காலத்தில் அந்த பணத்தை எடுக்க வேண்டிய தேவையில்லாமல் இருந்தால்
நல்லது. மேலும், வட்டி விகிதம் மாறக்கூடியது என்பதையும் நினைவில்
கொள்ள வேண்டும். வட்டி விகித சுழற்சியில், வரும் காலத்தில்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்க பட வாய்ப்பு
இருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
முதலீடு தரும் பலன் போலவே,
அதற்கான வரி அம்சமும் முக்கியம். முதலீடு வரிச்சலுகை
கொண்டிருந்தால், வரி சேமிப்பின் பலனையும் சேர்த்து பெறலாம்.
பி.பி.எப்., மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் தவிர மற்ற
திட்டங்களுக்கான பலன், ஒருவரது வருமானத்தில்
சேர்க்கப்பட்டு வரி
விதிப்புக்கு உள்ளாகும். எனவே, குறைந்த வருமான வரி வரம்பு
பிரிவுக்குள் இருப்பவர்களுக்கு இவை பொருத்தமாக இருக்கும்.
பி.பி.எப்., மற்றும் செல்வ மகள் திட்ட
முதலீட்டை வருமான வரி
சேமிப்பிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த அம்சங்கள் தவிர,
முதலீட்டாளர்கள் தங்கள் இடர் அம்சத்தையும் மனதில் கொண்டு,
அதற்கேற்ற முதலீடு சாதனங்களை தேர்வு செய்வது ஏற்றதாக அமையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|