பதிவு செய்த நாள்
05 நவ2019
23:43
மும்பை:ரியல் எஸ்டேட் துறை சந்தித்து வரும் பிரச்னைகளை தீர்ப்பது குறித்த பணிகளில் அரசும், ரிசர்வ் வங்கியும் இறங்கி இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மும்பையில், தேசிய பங்குச் சந்தையின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், இது குறித்து மேலும் கூறியதாவது:இத்துறையில் இருக்கும் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பது குறித்து, அரசு, ரிசர்வ் வங்கியுடன் தீவிரவாக ஆலோசித்து வருகிறது.ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை எங்களால் எவ்வளவு சிறப்பாக செய்யமுடியும், எங்கு தேவை இருக்கிறது, இத் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் விதிமுறைகளை மாற்றுவது என, அனைத்து அம்சங்களையும் ஆலோசித்து வருகிறோம்.
ஆகஸ்ட் மாதத்தில், பொருளாதாரத்தை சரிசெய்வதற்காக, அரசு பல நடவடிக்கைகளை அறிவித்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் நான் தொடவில்லை.ரியல் எஸ்டேட் துறைதான் அது. இத்துறையில் முதலீடு செய்வதற்கு நிறைய மாற்று நிதி வாய்ப்புகள் வருகின்றன. இருப்பினும், அவை கூடுதலான கொள்கை ஆதரவை விரும்புகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, விரைவில் ரியல் எஸ்டேட் துறைக்கான சலுகை அறிவிப்புகள் மற்றும் ஊக்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரக்கூடும் என, எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|