பதிவு செய்த நாள்
15 நவ2019
23:40
சென்னை:தமிழக கலாசாரங்களை பிரதிபலிக்கும் விதமாக, காஞ்சிப் பட்டு, கோவில் கோபுரம் மற்றும் தமிழ் எழுத்துகள் பொருந்திய கைக் கடிகாரத்தை, முதல் முதலாக, ‘டைட்டன்’ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
டைட்டன் நிறுவனம், ‘நம்ம தமிழ்நாடு கலெக் ஷன்’ என்ற பெயரில், கலை நுணுக்கங்களுடன் கூடிய கைக் கடிகாரங்களை, சென்னையில் முதல் முதலாக நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. இது குறித்து, டைட்டன் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த் கூறியதாவது:
தமிழகத்தின் பாரம்பரியத்தையும், வளமான கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில், கைக் கடிகாரங்களை வடிவமைத்துள்ளோம்.காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் இடம் பெறும் அன்னப் பறவையை கடிகாரங்களில் வடிவமைத்து உள்ளோம். உண்மையான பட்டு நுாலால் அந்த பறவையை வடிவமைத்து, கடிகாரத்தில் பதித்துள்ளோம்.
இதே போல, தமிழக கோவில் துாண்களில் அதிகளவு இடம் பெற்றிருக்கும், யாழி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமும், இதில் இடம் பெற்றுள்ளது. இது தவிர, இரண்டு, நான்கு, ஆறு என, தமிழ் மொழியில் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மேலும், டைட்டன் என்ற, நிறுவனத்தின் பெயரும், தமிழில் முதல் முதலாக பதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த கைக் கடிகாரத்தின் விலை, 4,495 முதல், 6,995 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|