பதிவு செய்த நாள்
29 நவ2019
04:11
புதுடில்லி: இந்தியாவில், வெங்காயம் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு போலவே, சீனாவில் பன்றி இறைச்சி விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளது, உலகின் வளரும் பொருளாதாரங்களை கொண்டுள்ள நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக, பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் வெங்காயம் விலை அதிகரித்து, கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக, 100க்கு மேல் விற்பனையாகிறது. இது, சில வாரங்களுக்கு முன், ௧௫ – ௨௦ ரூபாயாக இருந்தது. வெங்காயம் விலை உயர்வு, இந்திய சமையலறையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது போலவே, பணவீக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என, பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.அதுபோல, அண்டை நாடான சீனாவில், வரலாறு காணாத வகையில், அம்மக்களின் முக்கிய உணவான பன்றி இறைச்சி விலை உயர்ந்துள்ளது.
பறவைக் காய்ச்சல் நோய் பரவுகிறது என்பதற்காக, சில மாதங்களுக்கு முன், லட்சக்கணக்கான பன்றிகளை, அந்நாடு கொன்று குவித்தது; அதன் விளைவை, இப்போது அனுபவித்து வருகிறது.இதுபோலவே, துருக்கி, ஆப்ரிக்கா கண்டத்தின் தென் பகுதியில் உள்ள நாடுகளில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டு, அந்நாட்டு பொருளாதாரங்களை பாதித்து வருவதாக, பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|