பதிவு செய்த நாள்
01 டிச2019
23:51
கடன்
தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும் கிரெடிட்
ஸ்கோர் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பில் தொகையை உரிய
காலத்தில் செலுத்தாமல் இருப்பது போன்றவை கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்
என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.
மேலும் பல அம்சங்கள் ஒருவரது கிரெடிட் ஸ்கோரில்தாக்கம் செலுத்தலாம். கிரெடிட் ஸ்கோரை பாதித்து, கடனுக்கான வட்டிவிகிதத்தை அதிகமாக்கும் அம்சங்களை அறிந்து
இருப்பது அவசியம்:
ரியல்
எஸ்டேட்:
வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது, கிரெடிட்
ஸ்கோர் குறைவாக இருப்பது
பாதகமானது. ஆனால், ஏற்கனவே ஒன்று இல்லது
இரண்டு வீடுகளுக்கு சொந்தக்காரராக இருப்பதும் பாதிப்பை
ஏற்படுத்தும். சொந்த வீடுகள்உள்ளவர்களுக்கு கடன் அளிப்பது வர்த்தக ரியல் எஸ்டேட்டாக கருதப்பட்டு, வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.
கிரெடிட் கார்டு:
கிரெடிட் கார்டை சிறந்த முறையில்பயன்படுத்தினால், அதுவே கிரெடிட் ஸ்கோர் உயர
உதவும். ஆனால், கிரெடிட் கார்டை மோசமாக பயன்படுத்தினால்பாதிப்பு உண்டாகும். குறைந்த பட்ச தொகையைமட்டும் செலுத்தி, கடனை சுழற்சியில் வைத்திருந்தால்,
கிரெடிட் ஸ்கோர் குறையும்.
கடன் வரம்பு:
கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது,நிலுவைத்தொகை
இல்லாமல் குறித்த நேரத்தில் கடனை செலுத்தி வந்தால் மட்டும் போதாது.
கடன் வரம்பை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும்
முக்கியம். கார்டுக்கான கடன் வரம்பை அதிகபட்சம்
பயன்படுத்திக்கொள்வதும்பாதகமானது.
இ.எம்.ஐ., வசதி:
பண்டிகை காலங்களில், இ.எம்.ஐ., வசதியில் பொருட்களை கார்டு மூலம்
வாங்குவது
சுலபமாக இருக்கலாம். ஆனால், இப்படி பல பொருட்களை கார்டு
மூலமான தவணை வசதியில் வாங்கினால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும். பல வங்கிகளிடம் இருந்து, உங்கள் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான கோரிக்கை சென்றால், அது பாதகமாக கருதப்படும்.
எஸ்.ஐ.பி.,
முதலீடு:
பில் தொகையை ஒழுங்காக செலுத்துவது போல, எஸ்.ஐ.பி., முதலீடு
மற்றும் காப்பீடு தொகையையும் உரிய காலத்தில் செலுத்த வேண்டும்.
இவற்றுக்கானமாதத் தவணை தவறினால், ஒழுங்கீனமான முதலீட்டாளராககருதப்படும் அபாயம் உள்ளது. இதனால்,
கடனுக்கானவட்டி விகிதம் உயரலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|