பதிவு செய்த நாள்
09 டிச2019
00:22
கடன், டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கும் சூழலில், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு பார்வை.
பரவலாக எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, ரிசர்வ் வங்கி தன் அண்மை கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை. தொடர்ந்து ரெப்போ விகிதத்தை குறைத்த நிலைக்கு மாறாக, தற்போதைய வட்டி விகிதமே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முடிவுக்கான காரணம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான இதன் தாக்கம் அலசி ஆராயப்பட்டு வரும் நிலையில், கடன்கள் மற்றும் டெபாசிட்கள் மீதான தாக்கம் எப்படி இருக்கும் என்பதே சராசரி முதலீட்டாளர்கள் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது.
கடன் விகிதத்தில் மாற்றம்
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை மேலும் குறைக்கவில்லைஎன்றாலும், கடன்களுக்கான வட்டி விகிதம் ஓரளவுகுறைய வாய்ப்பிருப்பதாகவே பரவலாக கருதப்படுகிறது.கடந்த
பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ள, 135 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித குறைப்பின் பலன், இன்னமும்முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்படவில்லை.
இதன் காரணமாக வரும்மாதங்களில், வட்டி குறைப்பு நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு காலாண்டுகளில், 40 அடிப்படை புள்ளிகள் வரை கடனுக்கான வட்டி விகிதம் குறையலாம்.கடந்த, 2016 முதல் வங்கிகள் எம்.சி.எல்.ஆர்., முறையில் கடன் வழங்கி
வருகின்றன. அதற்கு முன்,‘பேஸ்ரேட்’ முறை பின்பற்றப்பட்டது.
தற்போது, ரெப்போ விகிதம் உள்ளிட்ட வெளிப்புற விகிதத்துடன் இணைக்கப்பட்ட விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பேஸ்ரேட் விகிதத்தில் கடன் பெற்றவர்கள்
விகிதம் குறைந்து வருகிறது. வீட்டுக்கடன்களில், 15 சதவீதம் பேஸ்ரேட் அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் தாக்கம் வட்டி விகிதம் கடத்தப்படுவதிலும் இருக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பேஸ்ரேட் விகிதம் மற்ற கடன் விகிதங்களை விட அதிகமாக இருப்பதால், இந்த விகிதத்தில் தொடர்பவர்கள், தங்கள் கடனை புதிய வட்டி விகித முறைக்குமாற்றிக்கொள்வது பற்றி பரிசீலிக்க வேண்டும். இதில் சாதகம் இருக்கும் என்றால் மாறுவது நல்லது.
அதே நேரத்தில், எம்.சி.எல்.ஆர்., விகிதத்தில் வட்டி விகிதம் சராசரியாக, 49 அடிப்படை
புள்ளிகள் குறைந்துள்ளது.
டெபாசிட் மீது தாக்கம்
இந்த முறையில் வட்டி விகிதம்,ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அல்லதுஆண்டுக்கு ஒரு முறை, ‘ரிசெட்’ செய்யப்படுகிறது. 2016ம் ஆண்டுக்குபிறகு இந்த கடன் விகிதம் சீரான அளவில் குறைந்து வருகிறது. தொடர்ந்து ரிசெட் செய்யப்படும் போது, இந்த போக்கு தொடரலாம்.
எனினும் வாடிக்கையாளர்கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனுக்கு மாறுவது பலன் தருமா என்றும் பரிசீலிக்கலாம்.கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பது போலவே, இதன் விளைவாக டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் குறையலாம் என
கருதப்படுகிறது.
இரண்டு விகிதங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. எனவே, டெபாசிட்கள் தரும்
வட்டி பலன் குறையலாம். இது டெபாசிட்களை முதன்மையான முதலீடாக கருதுபவர்களுக்கு
தாக்கத்தை ஏற்படுத்தும். முதலீட்டாளர்கள், அதிக பலன் தரக்கூடிய வேறு முதலீட்டு
வாய்ப்புகளை பரிசீலிக்கலாம். பி.பி.எப்., உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்கள் ஏற்றதாக
இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|