பதிவு செய்த நாள்
11 டிச2019
23:19
மும்பை:ரிசர்வ் வங்கி கவர்னராக, சக்திகாந்த தாஸ் பதவியேற்று, ஓராண்டு பூர்த்தியாகி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் படேல், ஓய்வு பெறுவதற்கு ஒன்பது மாதங்கள் பாக்கி இருந்த நிலையில், திடீரென பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.உர்ஜித் ராஜினாமா செய்ததை அடுத்து, பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கியின் கவர்னராக, கடந்த ஆண்டு டிசம்பர், 12ல் நியமிக்கப்பட்டார்.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இவர் அறிவிக்கப்பட்டபோது, பலரது புருவங்கள் உயர்ந்தன. சக்திகாந்த தாஸ், தற்போது ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக பொறுப்பேற்று உள்ளார். ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பது வெளிப்படையாக தெரிந்த சூழலில், சக்திகாந்த தாஸ் கவர்னராக பொறுபேற்றார்.இந்நிலையில், பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து கொள்ள, பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த ஓராண்டில் பல்வேறு சாதனைகளையும், சவால்களையும் அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* தொடர்ந்து ஐந்து முறை வட்டி குறைப்பை அமல் செய்தார்
* இதுவரை யாரும் செய்திராத வகையில், ஆகஸ்ட் மாதத்தில், 0.35 சதவீதம் என, புதிய அளவில் வட்டி குறைப்பை அறிமுகப்படுத்தினார்
* உலகமே வட்டி குறைப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு மாறாக, கடந்த முறை வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என, அறிவித்தார்
* ரெப்போ வட்டி குறைப்பின் பலனை, வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க, தொடர்ந்து வற்புறுத்தி, ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்
* ரிசர்வ் வங்கியின் இருப்பிலிருந்து, 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு கொடுத்தார்
* என்.இ.எப்.டி., முறையில், 16ம் தேதியிலிருந்து அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என அறிவித்தார்
* தொடர்ந்து, ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனை முயற்சிகளுக்கு, முழு ஆதரவை வழங்கி வருகிறார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|