பதிவு செய்த நாள்
18 டிச2019
02:46
சென்னை : இந்தியாவில், கடன் கொடுப்பவர்களின் சில்லரை கடன் அளவானது, ஐந்து ஆண்டுகளில், 96 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் கிரிசில் ஆய்வு நிறுவனம் இணைந்து, கடன் வழங்கும் அளவு குறித்து, ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வின் படி, இந்தியாவில் கடன் கொடுப்பவர்களின், சில்லரை கடன் அளவானது, ஐந்து ஆண்டுகளில், 96 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த மார்ச்சில், 48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதனுடன் ஒப்பிடும் போது, 96 லட்சம் கோடி ரூபாய் என்பது, இரு மடங்காகும்.அடமான கடன் சந்தை, -சாதாரண மற்றும் குறைந்த விலை வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான கடன் ஆகியவை, ஐந்து ஆண்டுகளில், 46 லட்சம் கோடி ரூபாயாக இரட்டிப்பாகும் என, எதிர்பார்க்கப்படுகிறதுபாதுகாப்பற்ற கடன்கள்,- தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் கடன்கள் போன்றவை, 13.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் வாகன கடன்கள், தற்போதைய அளவை விட இரட்டிப்பாகும் எனவும், இந்த ஆய்வு அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|