பதிவு செய்த நாள்
19 டிச2019
02:49
புதுடில்லி : நாட்டின் ஆடைகள் சந்தை, 2021ம் ஆண்டுக்குள், 11 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டு, 6 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக உயரும் என, ‘இந்தியா பிசினஸ் ஆப் பேஷன்’ எனும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் ஆடைகள் சந்தை தற்போது, 4.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இது, நாட்டில் உணவு மற்றும் மளிகைக்கு அடுத்தபடியான, இரண்டாவது பெரிய சில்லரை சந்தையாகும். இது, 11 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்து, 2021ம் ஆண்டில், 6 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக மாறும்.
அதிகரித்து வரும் இளம் வயதினர் தொகை, பெருகி வரும் நகரமயமாக்கல் மற்றும் செல்வம், அதிகரித்து வரும் நடுத்தர வருமான பிரிவினர் மற்றும் அதிக பிராண்டு விழிப்புணர்வு ஆகிய பல்வேறு காரணங்களால், நாட்டின் நாகரிக ஆடைகள் சந்தை வளர்ச்சி பெற்று வருகிறது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|