பதிவு செய்த நாள்
20 டிச2019
02:57
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், ஒன்பது பெரிய மாநிலங்களுக்கான, ஜி.எஸ்.டி., இழப்பீடு, இரு மடங்காக அதிகரித்து, 60 ஆயிரம் கோடி முதல், 70 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, ‘இக்ரா’ ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது.கர்நாடகா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான, ஜி.எஸ்.டி., இழப்பீடு இரு மடங்காக, நடப்பு நிதியாண்டில் உயரும்.மேலும், மத்திய வரிப் பகிர்வு, நடப்பு நிதியாண்டில் இந்த மாநிலங்களுக்கு, பட்ஜெட் கணிப்பை விட குறைவாக, 59 ஆயிரத்து, 500 முதல், 77 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும்.
நடப்பு நிதியாண்டில், எஸ்.ஜி.எஸ்.டி., வருவாய் குறிப்பிடத்தக்க அளவு குறையும் என தெரிகிறது. இது, ஜி.எஸ்.டி., சட்டம் – 2017ன் கீழ் பாதுகாக்கப்பட்ட வருவாயின் அளவை விட கணிசமாக குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|