பதிவு செய்த நாள்
22 டிச2019
03:51
புதுடில்லி : வங்கி துறையின் வாராக் கடன் நிலைமை, நடப்பு நிதியாண்டின் இறுதியில் மேம்படும் என, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் ரஜனிஷ் குமார் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற, ‘பிக்கி’ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜனிஷ் குமார், பெரும்பாலான வங்கிகள், மார்ச் மாதத்துக்குள் வாராக் கடன் விஷயத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கும் என்றும், கடன் வழங்குவதற்கான அமைப்பில் பணப் புழக்கத்துக்கு குறைவில்லை என்றும் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதிக்குள், வாராக் கடனை பொறுத்தவரை, பெரும்பாலான வங்கிகள் நல்ல மேம்பட்ட நிலையில் இருக்கும்.
கடனுக்கான வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கு அப்பால் குறைக்க முடியாது.வங்கிகள் அமைப்பில், மூலதன பற்றாக்குறை எதுவும் இல்லை. ஆனால், பெருநிறுவனங்கள் போதுமான அளவு கடன் வாங்கவில்லை; அவற்றின் திறனை சரியாகப் பயன்படுத்தவில்லை.எங்களைப் பொறுத்தவரை, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக கடன் வழங்குவது, முற்றிலும் பாதுகாப்பற்றது. அரசின் ஏலம் என்பதால், பேப்பர் அளவில் அவை பாதுகாப்பானதாக இருக்கும்.
ஆனால், நடைமுறையில் அது முற்றிலும் பாதுகாப்பற்ற ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலைகளில், கடன் வழங்குவதற்கு முன், கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டியதிருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|