புதிய பங்கு வெளியீட்டில் யு.டி.ஐ., ஏ.எம்.சி., புதிய பங்கு வெளியீட்டில் யு.டி.ஐ., ஏ.எம்.சி., ... 2020ல் சுந்தர் பிச்சையின் வருமானம் ரூ.2788 கோடி 2020ல் சுந்தர் பிச்சையின் வருமானம் ரூ.2788 கோடி ...
‘ஸ்பெக்ட்ரம்’ கடன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2019
03:51

புதுடில்லி : வங்கி துறையின் வாராக் கடன் நிலைமை, நடப்பு நிதியாண்டின் இறுதியில் மேம்படும் என, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் ரஜனிஷ் குமார் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற, ‘பிக்கி’ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜனிஷ் குமார், பெரும்பாலான வங்கிகள், மார்ச் மாதத்துக்குள் வாராக் கடன் விஷயத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கும் என்றும், கடன் வழங்குவதற்கான அமைப்பில் பணப் புழக்கத்துக்கு குறைவில்லை என்றும் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதிக்குள், வாராக் கடனை பொறுத்தவரை, பெரும்பாலான வங்கிகள் நல்ல மேம்பட்ட நிலையில் இருக்கும்.

கடனுக்கான வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கு அப்பால் குறைக்க முடியாது.வங்கிகள் அமைப்பில், மூலதன பற்றாக்குறை எதுவும் இல்லை. ஆனால், பெருநிறுவனங்கள் போதுமான அளவு கடன் வாங்கவில்லை; அவற்றின் திறனை சரியாகப் பயன்படுத்தவில்லை.எங்களைப் பொறுத்தவரை, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக கடன் வழங்குவது, முற்றிலும் பாதுகாப்பற்றது. அரசின் ஏலம் என்பதால், பேப்பர் அளவில் அவை பாதுகாப்பானதாக இருக்கும்.

ஆனால், நடைமுறையில் அது முற்றிலும் பாதுகாப்பற்ற ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலைகளில், கடன் வழங்குவதற்கு முன், கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டியதிருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)