பதிவு செய்த நாள்
22 டிச2019
04:21
சான் பிரான்சிஸ்கோ: ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஆண்டு (2020) சம்பளமாக 2 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி) உள்பட பல்வேறு வழிகள் மூலம் ரூ.2788 கோடி ரூபாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜன., 1ம் தேதி முதல் சுந்தர் பிச்சை 2 மில்லியன் டாலர் சம்பளத்தை பெறுவார் என ஆல்பபெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் பங்கு உள்ளிட்டவற்றில் சுந்தர் பிச்சையின் பங்காக 240 மில்லியன் டாலர் (ரூ.1700 கோடி) வழங்கப்பட உள்ளது.
இதில் ஆல்பபெட் நிறுவனத்தின் பங்காக மட்டும் 90 மில்லியன் டாலர் வழங்கப்பட உள்ளது. 2022 ம் ஆண்டு வரையிலான பங்காக 90 மில்லியன் டாலர்கள் சுந்தர் பிச்சைக்கு டிச.,19 அன்று வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல சுந்தர் பிச்சையின் செயல்பாடுகளுக்காக 120 மில்லியன் டாலர்களும், அவர் தனது பணியை தொடர்வதற்காக 30 மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே ஆல்பபெட் நிறுவன சிஇஓ.,வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். .
2004 ம் ஆண்டு கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை, கூகுளின் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வசித்தார். இதுவே உலக அளவில் கூகுள் மிகவும் புகழ்பெற்ற இன்டர்நெட் பிரவுசராக மாற காரணமாக அமைந்தது. கூகுளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வசித்ததற்காக 2015 ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ.,வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|