கன்டெய்னர் மூலமான வர்த்தகம் செப்டம்பர் காலாண்டில் மந்தம் கன்டெய்னர் மூலமான வர்த்தகம் செப்டம்பர் காலாண்டில் மந்தம் ...  அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் ...
ஜி.எஸ்.டி., வங்கி கணக்கு முடங்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2019
03:16

புதுடில்லி: சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது, நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை தான் இது. ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், ஒருவர் மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில், 20 சதவீதம் பேர் கணக்கை தாக்கல் செய்வதில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜி.எஸ்.டி., வருமான வசூலை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்வதில் போதாமைகள் இருக்கிற காரணத்தால், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம், ஒரு வசதியை வழங்குகிறது. இதன்படி, கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு, கெடு தேதிக்குப் பின், ‘மெயில்’ அல்லது குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும்.அடுத்த, ஐந்து நாட்களுக்குப் பின், 15 நாட்களுக்குள் வருமானத்தை தாக்கல் செய்யுமாறு அல்லது பணம் செலுத்துமாறு கூறி, ஓர் அறிவிப்பு கொடுக்கப்படும்.

இந்த அறிவிப்பு வெளியான, 15 நாட்களுக்குள், வருமான கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், தகுதியான அதிகாரியால், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வரி கணக்கு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். வழங்கப்படும் கெடுவுக்குள், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், நிறுவனத்தின் பதிவை ரத்து செய்வது, வங்கி கணக்கை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் தான். இருப்பினும், தற்போதைய மந்தநிலை, நிதித் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால், பலர் நிறுவனங்களை நடத்தவே சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தின் பதிவை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள், பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்றும் ஒரு தரப்பினர் எச்சரிக்கை செய்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)