ஜி.எஸ்.டி.,  வங்கி கணக்கு முடங்கும் ஜி.எஸ்.டி., வங்கி கணக்கு முடங்கும் ...  நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம் நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம் ...
அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2019
03:18

புதுடில்லி: இந்திய வாகன துறை, அடுத்த ஆண்டின் பிற்பாதியில், மீண்டும் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில், மிகவும் பாதிப்புக்கு உள்ளான துறைகளில் ஒன்றாக, வாகன துறை உள்ளது. கடந்த ஜனவரி முதல், நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வாகன விற்பனை, உள்நாட்டில், 13.8 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டுள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ தெரிவித்துள்ளது.இதே காலகட்டத்தில் வர்த்தக வாகனங்கள், 22.12 சதவீதமும், பயணியர் வாகனங்கள், 17.98 சதவீதமும் சரிவை கண்டுள்ளன.

இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, 15.74 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள், 4.97 சதவீதமும் சரிந்துள்ளன.இருப்பினும், நடப்பு ஆண்டில், பல புதிய பிராண்டுகள் வந்துள்ளன; மேலும், பல புதிய மாடல்களும் அறிமுகம் ஆக உள்ளன. இவை, அடுத்த ஆண்டு குறித்த நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன.கார்கள் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள், அடுத்த ஆண்டில், பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றனர்.

பல நிறுவனங்கள், மின் வாகனங்களையும் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளன. மேலும், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ பிரச்னைகளும் தீர்ந்து, பணப் புழக்கத்தை அதிகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பலன் தரும் பட்சத்தில், அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில், வாகன துறை வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என மதிப்பிடப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)