பதிவு செய்த நாள்
27 டிச2019
03:18
புதுடில்லி: இந்திய வாகன துறை, அடுத்த ஆண்டின் பிற்பாதியில், மீண்டும் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில், மிகவும் பாதிப்புக்கு உள்ளான துறைகளில் ஒன்றாக, வாகன துறை உள்ளது. கடந்த ஜனவரி முதல், நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வாகன விற்பனை, உள்நாட்டில், 13.8 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டுள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ தெரிவித்துள்ளது.இதே காலகட்டத்தில் வர்த்தக வாகனங்கள், 22.12 சதவீதமும், பயணியர் வாகனங்கள், 17.98 சதவீதமும் சரிவை கண்டுள்ளன.
இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, 15.74 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள், 4.97 சதவீதமும் சரிந்துள்ளன.இருப்பினும், நடப்பு ஆண்டில், பல புதிய பிராண்டுகள் வந்துள்ளன; மேலும், பல புதிய மாடல்களும் அறிமுகம் ஆக உள்ளன. இவை, அடுத்த ஆண்டு குறித்த நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன.கார்கள் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள், அடுத்த ஆண்டில், பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றனர்.
பல நிறுவனங்கள், மின் வாகனங்களையும் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளன. மேலும், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ பிரச்னைகளும் தீர்ந்து, பணப் புழக்கத்தை அதிகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பலன் தரும் பட்சத்தில், அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில், வாகன துறை வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என மதிப்பிடப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|