பதிவு செய்த நாள்
28 டிச2019
02:46
புதுடில்லி: நாடு சரியான பாதையில் செல்வதாகவும், வேலையின்மை தான் மிகவும் கவலையளிப்பதாக இருப்பதாகவும், ஆய்வு ஒன்றில் பெரும்பாலானோர் தெரிவித்து உள்ளனர்.
சந்தை ஆய்வு நிறுவனமான, ‘இப்சாஸ்’ சமீபத்தில் எடுத்த ஆய்வில், இவ்வாறு தெரிய வந்துள்ளது. இது குறித்து, ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நகர்ப்புற இந்தியர்களை பொறுத்தவரை, கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள், வேலையின்மை பிரச்னை தான் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், 69 சதவீதத்தினர், நாடு சரியான பாதையில் செல்வதாக தெரிவித்துஉள்ளனர்.நிதி மற்றும் அரசியல் சார்ந்த ஊழல்கள், குற்றம் மற்றும் வன்முறைகள், வறுமை, சமூக சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் ஆகியவையும், இந்தியர்களை அதிகம் கவலையடையச் செய்துள்ளது.
உலக நாடுகளைச் சேர்ந்த, 61 சதவீதம் பேர், அவரவர் நாடு சரியான பாதையில் செல்வதாக கூறியிருக்கும் நிலையில், இந்தியாவில் தான், 69 சதவீதம் பேர், சரியான பாதையில் போவதாக தெரிவித்து உள்ளனர்.மேலும், 46 சதவீதம் பேர், வேலையின்மை பிரச்னை குறித்து கவலை கொள்வதாக தெரிவித்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தில் இது மேலும், 3 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆய்வு, ஒவ்வொரு மாதமும், 28 நாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு, அக்டோபரில் எடுக்கப்பட்டதாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|