வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மியூச்சுவல் பண்டு முதலீடுகள் அதிகரிப்பு: முதலீட்டாளர்கள் நம்பிக்கை உயர்வின் வெளிப்பாடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஜன2020
00:20
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு, கடந்த ஆண்டில், 3.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.
கடந்த, 2019ம் ஆண்டில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பானது, 3.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 26.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
13 சதவீத வளர்ச்சி
இது, இதற்கு முந்தையஆண்டான, 2018ல், டிசம்பர் மாத முடிவில், 23.62 லட்சம்கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, கடந்த ஆண்டில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், 13 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் நம்பிக்கையை அதிகரிக்க, கடன் திட்டங்களில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி எடுத்த நடவடிக்கைகள், இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.
மியூச்சுவல் பண்டு துறையில் ஈடுபட்டு வரும் மொத்தம், 44 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த, 2018ம் ஆண்டில், 7.5 சதவீதம் அதிகரித்திருந்தது. ஆனால், இதுவே, 2019ல் 13 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், 2017ல், 5.4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 32 சதவீத வளர்ச்சியை பெற்றது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தற்போதைய, 13 சதவீதம் வளர்ச்சி குறித்து நிபுணர்கள் குறிப்பிடும்போது, இந்த இரட்டை இலக்க வளர்ச்சி சாதகமான நிலையை உணர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிக முதலீடுகள்
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்வகையில், செபி எடுத்த நடவடிக்கைகள், மியூச்சுவல் பண்டு முகவர்களுக்கு, மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உதவிகரமாக அமைந்தது. இது குறித்து, குவான்டம்மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி ஜிம்மி படேல் கூறியதாவது:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், தற்போது நாம் காணும் இந்த வளர்ச்சியானது, கடன் சார்ந்த திட்டங்களில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்டதாகும்.
கடந்த, 2019ம் ஆண்டு முதலீட்டுக்கு ஏற்ற ஆண்டாக இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டு வந்த நிலையில், அதை அடியோடு மாற்றும் வகையில், முதலீடுகள் அதிகரித்தன.மாதா மாதம் முதலீடும் செய்யும் வகையிலான, எஸ்.ஐ.பி., திட்டத்தின் மூலம், 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் வந்துள்ளன.இதிலிருந்து முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த முதலீடுகளில் நம்பிக்கை இழக்கவில்லை என்பதும், எஸ்.ஐ.பி., முறையில் விருப்பம் கொண்டிருப்பதும் புலனாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த, 2009 நவம்பரில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு, 8.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2019 நவம்பரில், 27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதாவது, பத்து ஆண்டுகளில், மூன்று மடங்குக்கும் அதிகமாக வளர்ச்சி பெற்று உள்ளது.
நடப்பு ஆண்டிலும், மியூச்சுவல் பண்டில் அதிக அளவு முதலீடுகளை முதலீட்டாளர்கள் மேற்கொள்வார்கள் என கருதுவதாக, நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 05,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 05,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 05,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 05,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!