பதிவு செய்த நாள்
05 ஜன2020
23:34
பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால் கெடு இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதே போல, இந்த நிதியாண்டுடன் கெடு முடியும் மற்ற முக்கிய நிதி செயல்பாடுகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
* பிரதம மந்திரி ஆவாஸ் யோஜான திட்டம் கீழ், மத்திய தர வருமானம் பெறும் பிரிவினர், வீட்டுக்கடன் மானிய பலன் பெறுவதற்கான காலம் மார்ச் 31 தேதியுடன் முடிகிறது
* மூத்த குடிமகன்களுக்கான பென்ஷன் திட்டமான பிரதம மந்திரி வய வந்தனா யோஜானா திட்டத்தில், மார்ச் 31 வரை தான் முதலீடு செய்ய முடியும்
* கடந்த, 2018 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், மார்ச் 31ம் தேதிக்கு முன் தாமதமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின், வருமான
வரித்துறை கூறினால் மட்டுமே கணக்கை தாக்கல் செய்ய முடியும். ஏற்கனவே தாக்கல் செய்த கணக்கில் திருத்தம் செய்வதாக இருந்தாலும், மார்ச் இறுதி வரை தான் அனுமதிக்கப்படும்
* வரி சேமிப்பிற்கான முதலீடு செய்ய விரும்புவோர், மார்ச் மாதத்திற்குள் வரி சேமிப்பு முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|