எம்.எஸ்.எம்.இ., நவீனப்படுத்த 15 சதவீதம் அரசு மானியம்!எம்.எஸ்.எம்.இ., நவீனப்படுத்த 15 சதவீதம் அரசு மானியம்! ... ‘பம்ப் செட்’ தொழிலுக்கு பலம் ‘பம்ப் செட்’ தொழிலுக்கு பலம் ...
தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி கோவை, திருப்பூர் சாதிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
17:16

மத்­திய பட்­ஜெட்­டில், தொழில்­நுட்ப ஜவுளி(டெக்­னிக்­கல் டெக்ஸ்­டைல்ஸ்) வகை உற்­பத்­தியை, தரம் உயர்த்த, ஆயி­ரத்து 480 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
பின்­ன­லா­டைத்­து­றை­யில் கோலோச்­சும் திருப்­பூர், ஜவு­ளித்­து­றை­யில் சிறந்து விளங்­கும் கோவை உட்­பட, தமி­ழ­கத்­தில் உள்ள பல்­வேறு மாவட்­டங்­கள், தொழில்­நுட்ப ஜவுளி உற்­பத்­தியை, சர்­வ­தே­சத் தரத்­துக்கு உயர்த்­து­வ­தற்கு இது வழி­வ­குக்­கும் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.விண்­வெளி வீரர்­க­ளுக்­கான ஆடை, குண்டு துளைக்­காத உடை, தீப்­பி­டிக்­காத ஆடை, கதிர்­வீச்சு அபா­யத் தடுப்பு உடை என உயர் ரகங்­கள் துவங்கி, சாமா­னி­யர்­க­ளுக்­குத் தேவை­யான தொழில்­நுட்ப ஜவு­ளி­கள் வரை, 13க்கும் மேற்­பட்ட தொகுப்­பு­கள் உள்­ளன. மருத்­து­வம், ராணு­வம், தீய­ணைப்பு, காவல், கட்­டு­மா­னம், விமா­னப் போக்­கு­வ­ரத்து, விளை­யாட்டு, கன­ர­கத் தொழில், விவ­சா­யம், மீன்­பி­டித்­தொ­ழில், சாலை அமைப்பு எனப் பல்­வேறு துறை­யி­ன­ருக்­கும், தொழில்­நுட்ப ஜவுளி அவ­சி­ய­மா­ன­தாக இருக்­கிறது.
நுாற்­பா­லை­கள் போன்­ற­வற்றை உரு­வாக்க, அதிக முத­லீடு தேவை. அதே­ச­ம­யம், தொழில்­நுட்ப ஜவு­ளிக்கு மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வரை முத­லீடு போது­மா­னது. முத­லீடு, சந்தை வாய்ப்பு, தொழில்­நுட்ப ஆலோ­ச­னை­களும் எளி­தா­கக் கிடைக்­கின்­றன.புதிய கண்­டு­பி­டிப்­பு­களும், துறைக்­கேற்ப நவீ­ன­ம­ய­மாக்­க­லும், எளி­தாக்­க­லும், தொழில்­நுட்ப ஜவு­ளித் தொழில்­நுட்­பத்­துக்கு அவ­சி­ய­மாக இருக்­கின்­றன. குறிப்­பாக, இதற்­கான ஆராய்ச்சி என்­பது அதி­க­ள­வில் தேவை. பல்­வேறு துறை­க­ளுக்­கும், தேவை­யான தொழில்­நுட்ப ஜவு­ளி­களை இனம் கண்­ட­றி­த­லும், புதிய வர்த்­தக வாய்ப்­பு­க­ளுக்­கும் இது அவ­சி­ய­மா­கிறது. படித்த இளை­ஞர்­கள் இந்த வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி, ‘ஸ்டார்ட் அப்’கள் துவங்­கி­னால், சாதிக்க முடி­யும்.
வகை தொழில்­நுட்ப ஜவு­ளி­களை, நாடு இறக்­கு­மதி செய்ய வேண்­டிய கட்­டா­யத்­தில், இன்­னும் இருக்­கிறது. இத­னால், அன்­னி­யச் செலா­வ­ணி­யை­யும் இழக்க நேரி­டு­கிறது. மத்­திய, மாநில அர­சின் பல்­வேறு துறை­க­ளுக்­கும், தொழில்­நுட்ப ஜவு­ளி­க­ளின் தேவை இருக்­கிறது. எனவே, அர­சுத்­துறை ஆர்­டர்­க­ளைப் பெறு­வ­தற்­கான வாய்ப்­பு­களும் உள்­ளன.நாட்­டில், தொழில்­நுட்ப ஜவு­ளித்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளின்வளர்ச்சி மந்­த­மா­கவே உள்­ளது. உற்­பத்­தித்­தி­றன், நுகர்­வி­லும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே உள்­ளன. இதை மாற்­றிக்­காட்ட வேண்­டிய கட்­டா­யம் இருக்­கிறது. குறிப்­பாக, 10 மடங்கு தொழில்­நுட்ப ஜவுளி உற்­பத்­தியை அதி­க­ரித்­தால்­தான், சர்­வ­தேச வர்த்­த­கப்­போட்­டிக்கு ஈடு­கொ­டுத்து, ஆர்­டர்­க­ளைப் பெற முடி­யும். வேலை­வாய்ப்­பும் உய­ரும். சவால்­தான்; ஆனால்,முறி­ய­டிக்­கக்­கூ­டி­ய­து­தான்!
அடுத்த கட்ட நகர்வு!கோவை, திருப்­பூர் தொழில்­து­றை­யி­னர் கூறு­கை­யில், ‘‘ஜவு­ளித்­து­றை­யின் அடுத்­த­கட்ட நகர்­வுக்கு, தொழில்­நுட்ப ஜவு­ளித் தயா­ரிப்பு எதிர்­கா­லத்­தில் பெரும் பங்கு வகிக்­கும். கோவை­யில், ஏற்­க­னவே, தேசிய அள­வி­லான தொழில்­நுட்ப ஜவு­ளித்­தொ­ழில் முத­லீட்­டா­ளர் மாநாடு நடத்­தப்­பட்­டி­ருக்­கிறது. கோவை, திருப்­பூர் மாவட்­டத்­தில் உள்ள வச­தி­கள், தொழில்­நுட்ப வளர்ச்சி போன்­றவை தொழில்­நுட்ப ஜவு­ளித்­துறை வளர்ச்­சிக்­குச் சாத­க­மாக உள்­ளன’ என்­கின்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)