தொலைநோக்குப் பார்வையில் பயன் தரும் பட்ஜெட்!சிதம்பரம் புகார்களுக்கு ஆடிட்டர் தரும் விளக்கம் தொலைநோக்குப் பார்வையில் பயன் தரும் பட்ஜெட்!சிதம்பரம் புகார்களுக்கு ... ... சேவைகள் துறை வளர்ச்சி அதிகரிப்பு கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்வு சேவைகள் துறை வளர்ச்சி அதிகரிப்பு கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்வு ...
வேலைவாய்ப்புகள் பட்ஜெட்டால் அதிகரிக்கும் :தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
23:25

சென்னை:‘‘மத்திய பட்ஜெட்டில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன,’’ என, சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி தெரிவித்தார்.


சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், ராம்குமார் ராமமூர்த்தி பேசியதாவது: இந்தியாவில், 20 – 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை, 27 கோடியாக உள்ளது. அடுத்த, 10 ஆண்டுகளில், கூடுதலாக, ஒன்பது கோடி பேர் வேலை செய்யும் நிலைக்கு வருவர்.


மத்திய பட்ஜெட்டில், தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களின் பயன்பாடு இல்லை.தற்போது, அந்த தொழிலில், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இது போன்று பட்ஜெட்டில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.


மேலும், நிறுவனங்கள் செலுத்தும் வரியை குறைத்தது; பங்குதாரர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும், ‘டிவிடெண்ட்’ வரி ரத்து; புதிய தொழில் துவங்குவோருக்கு சலுகைகள் என, வரவேற்க கூடிய பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.


உலகில், மற்ற நாடுகளின் அரசுகள், தங்கள் வசம் உள்ள நிதியை, இந்தியாவில் முதலீடு செய்யலாம் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நம் நாட்டில், பல நாடுகள் தொழில்களை துவங்க ஆர்வம் காட்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் செயலர் சரஸ்வதி மற்றும் வரி நிபுணர்கள் உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)