பதிவு செய்த நாள்
07 பிப்2020
23:57
புதுடில்லி:டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கூறியதாவது:பெட்ரோல், டீசல், கலப்பு எரிபொருள் ஆகியவற்றில் இயங்கும் வாகனங்கள், அடுத்து, மின்வாகனங்கள் என்ற கட்டத்தை நோக்கி நகரத் துவங்கியுள்ளன.
இந்த மாற்றம் சுமூகமாக நிகழ்வதற்கு தேவையான கொள்கை திட்டங்களை, உலக நாடுகள் வகுக்க வேண்டும். தற்போது சாலையில் ஓடும் வாகனங்களை, ஒரேயடியாக மின் வாகனங்களாக மாற்றுவது கடினம்.குறிப்பாக, மின்வாகனங்களுக்கு தேவையான ‘சார்ஜிங்’ நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், அவ்வாறு செய்ய முடியாது.
எரிபொருளில் இயங்கும் வாகனத்தின் இன்ஜினில் இருந்து, மின்வாகனத்தை இயக்கும் தொழில்நுட்ப இயந்திரம் வேறுபட்டது. அதனால், மின்வாகன உந்து சக்திக்கான இயந்திரச் செயல்பாடுகளை வடிவமைப்பதில், உலக நாடுகளும், வாகன துறையும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|