பதிவு செய்த நாள்
09 பிப்2020
11:30
இந்தியாவில் உள்ள ஒரு குடும்பத்தில், இரண்டு பேர் வருமானம் ஈட்டும் இக்காலத்தில், குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்க, பெற்றோர் அதை மறுப்பதே இல்லை. இதனால், இந்த கடைகள், இந்தியாவில் பெருகி விட்டன.
கடந்த பத்து ஆண்டுகளில், குழந்தைகளை மையமாக வைத்தே, பல ‘ஸ்டார்ட் அப்’கள் வந்திருக்கின்றன.இதற்கு ஒரு சிறிய உதாரணம், ‘டயப்பர்’ மார்க்கெட். 2020ல், இதன் மார்க்கெட் மதிப்பு, ஏறத்தாழ, 37 ஆயிரம் கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதுதவிர, குழந்தைகளுக்கான உடைகள், விளையாட்டு பொருட்கள், பரிசுப் பொருட்கள், தொட்டில்கள், செருப்புகள், பீடிங் பாட்டில்கள், பேஷன் பொருட்கள், புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகள், சிறிய மற்றும் பெரிய கடைகள் பெருகி கொண்டே செல்கின்றன.இதை மையமாக வைத்து துவக்கப்பட்ட பர்ஸ்ட் கிரை (FIRST CRY), என்ற கம்பெனி, அபரிமிதமாக வளர்ச்சியடைந்து, தற்போது, பல ஊர்களில் கடை பரப்பியுள்ளது. இதன், தற்போதைய மார்க்கெட் மதிப்பு, 7,000ம் கோடி ரூபாயை தாண்டுகிறது.ஒரு ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனி, 7,000ம் கோடி ரூபாய் மதிப்பை அடைந்தால் அது, ‘யுனிகார்ன் கம்பெனி’ என அழைக்கப்படும். இந்தியளவில், 30 கம்பெனிகள், ‘யுனிகார்ன் கம்பெனி’ அந்தஸ்தை பெற்றுள்ளது, மகிழ்ச்சியான விஷயம்.இணையதளத்தில் பதிவுவரும், 2025க்குள், ஏறத்தாழ, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, இந்தியாவிலிருந்து ‘ஆன்லைன்’ மூலமாக, பல நாடுகளிலும் விற்பனை செய்ய ‘அமேசான்’ முடிவு செய்துள்ளது.
தற்போது, அமேசானில், 60 ஆயிரம் இந்திய விற்பனையாளர்கள், வெளிநாடுகளில் பொருட்களை விற்க, தங்களை பதிவு செய்துள்ளனர். இந்தியாவில், ஏறத்தாழ, 6 கோடிக்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் இருப்பதால், அவர்களும், தங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.இந்தியாவில் இருந்து, டெக்ஸ்டைல்ஸ், ஆயுர்வேதிக் அழகு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், காலணிகள் ஆகியன, ‘ஆன்லைனில்’ அதிகம் விற்பனையாகும் பொருட்கள். நீங்களும் உங்கள் பொருட்களை ‘அமேசான் இந்தியா’ மூலம் உலகின் பல நாடுகளுக்கும் எடுத்து செல்லலாமே! இணையதளம்: https://services.amazon.in/services/amazon-global-selling/help.htmlசந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com, 98204–51259, www.startupbusinessnews.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|