பதிவு செய்த நாள்
23 பிப்2020
05:19
புதுடில்லி: சீனாவின் தற்போதைய நிலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களுக்கு, வாராக் கடன் விதிமுறைகளில் சலுகைகள் காட்ட வேண்டும் என, நிதியமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் நோய் தாக்குதலால், அங்குள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி, அவற்றுடன் தொடர்புடைய பிற நாட்டு நிறுவனங்களும் பாதிப்பை சந்திக்கின்றன.இந்தியாவிலும் இத்தகைய பாதிப்புகள் அதிகம் உள்ளன. நாட்டில் உள்ள பல நிறுவனங்கள், மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் என பலவற்றுக்கு சீனாவை சார்ந்துள்ளன.மூலப்பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால், தற்போது இந்நிறுவனங்கள் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றன. சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில், இந்நிறுவனங்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. எனவே, இத்தகைய நிறுவனங்களுக்கு, வாராக்கடன் விதிமுறைகளில் சில சலுகைகளை வழங்கி, அவகாசங்கள் தர வேண்டும் என, இத்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.இதையடுத்து, நிதியமைச்சகம் இவ்விவகாரம் குறித்து, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|