ஆர்காம் சொத்து விற்பனைக்கு அனுமதி ஆர்காம் சொத்து விற்பனைக்கு அனுமதி ...  எஸ்.இ.இசட்., அமைக்க மத்திய அரசு அனுமதி எஸ்.இ.இசட்., அமைக்க மத்திய அரசு அனுமதி ...
தினமும் மிரட்டுது தங்கம் விலை; இன்று புதிய உச்சம் - கவலையில் நுகர்வோர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2020
11:25

சென்னை : தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருவதால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் சவரன் ரூ.872 உயர்ந்து புதிய உச்சமாக ரூ.33,848ஆக எட்டி உள்ளது.

கொரானா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தங்கம் விலையிலும் எதிரொலிக்கிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்கின்றனர். இதன்காரணமாகவும், ரூபாயின் மதிப்பு சரிவாலும் தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்று புதிய உச்சமாக சவரன் ரூ.33,848-ஐ எட்டி உள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(மார்ச் 6) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.109யும், சவரன் ரூ.872 உயர்ந்து ரூ.33,848க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை சவரன் ரூ.1,090 உயர்ந்து ரூ.44,370க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.50.70க்கு விற்பனையாகிறது.

கவலையில் நுகர்வோர்
இந்தியாவில் இருப்பவர்கள் தங்கத்தை பெரிதும் விரும்புபவர்கள். திருமணத்தின் போது பெண்ணுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய சீராக தங்கம் பார்க்கப்படுகிறது. அதுவும் இப்போது திருமண சீசன் என்பதால் தங்கம் வாங்க காத்திருந்தவர்கள், அதன் விலையை கண்டு கவலையில் உள்ளார்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)