பதிவு செய்த நாள்
06 மார்2020
23:40
புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக, மென்பொருள் நிறுவனமான, டி.சி.எஸ்., மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்., ஆகியவை, மத்திய அரசுக்கு திட்டங்களை சமர்ப்பித்திருந்தன.
இவற்றை பரிசீலித்த மத்திய அரசு, தற்போது அனுமதி வழங்கி உள்ளது.இவ்விரு நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப துறைக்கான எஸ்.இ.இசட்., எனும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்க இருக்கின்றன.
டி.சி.எஸ்., நிறுவனம்,நொய்டாவில், 19.9 ஹெக்டேர் பரப்பளவில், 2,434 கோடி ரூபாய் முதலீட்டில், சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.டி.எல்.எப்., நிறுவனம், ஹரியானாவில், இரண்டு மண்டலங்களை அமைக்கிறது. 794 கோடி ரூபாய் மற்றும் 762 கோடி ரூபாய் முதலீட்டில், இவ்விரு மண்டலங்களும் அமைக்கப்பட இருக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில், 417 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில், 238 மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|