பதிவு செய்த நாள்
10 மார்2020
01:27
புதுடில்லி:வாகன முகவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், ‘பாரத் ஸ்டேஜ் – 4’ வாகனங்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடியுமா என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.ஏப்ரல், 1ம் தேதி முதல், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ விதிமுறைகளுக்கு இணக்கமான வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், பாரத் ஸ்டேஜ் –4 வாகனங்களை, மார்ச், 31ம் தேதிக்குள் விற்பனை செய்துவிட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.இந்நிலையில், விற்பனை செய்வது குறித்த அச்சத்தில் முகவர்கள் இருப்பதாக, எப்.ஏ.டி.ஏ., எனும் வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:அரசின் கெடு ஒருபுறம்இருக்க, வங்கிகளும், குறிப்பிட்ட நாட்களுக்குப்பின், பி.எஸ்., – 4 வாகனங்களுக்கு கடனுதவி வழங்கப்படாது என, அறிவித்துள்ளன. மேலும், ‘கொரோனா’ வைரஸ் அச்சமும் அதிகரித்துவிட்டது.
இதுபோல் பல்வேறு காரணங்கள் ஒன்று சேர்ந்துவிட்டன. எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாகனங்களை விற்பனை செய்வது இயலாததாகி வருகிறது.ஒன்று, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்காத வாகனங்களை திரும்பப் பெற்று, வேறு நாடுகளில் விற்க முயற்சிக்க வேண்டும் அல்லது முகவர்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டும். இதுவே தற்போதைய நிலை.இருப்பினும், இது குறித்து, நீதிமன்றத்தில் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|