நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைத்து அறிவித்தது, ‘மூடிஸ்’நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைத்து அறிவித்தது, ‘மூடிஸ்’ ... ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு! ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு! ...
கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
01:27

புதுடில்லி:வாகன முகவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், ‘பாரத் ஸ்டேஜ் – 4’ வாகனங்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடியுமா என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.ஏப்ரல், 1ம் தேதி முதல், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ விதிமுறைகளுக்கு இணக்கமான வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், பாரத் ஸ்டேஜ் –4 வாகனங்களை, மார்ச், 31ம் தேதிக்குள் விற்பனை செய்துவிட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.இந்நிலையில், விற்பனை செய்வது குறித்த அச்சத்தில் முகவர்கள் இருப்பதாக, எப்.ஏ.டி.ஏ., எனும் வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:அரசின் கெடு ஒருபுறம்இருக்க, வங்கிகளும், குறிப்பிட்ட நாட்களுக்குப்பின், பி.எஸ்., – 4 வாகனங்களுக்கு கடனுதவி வழங்கப்படாது என, அறிவித்துள்ளன. மேலும், ‘கொரோனா’ வைரஸ் அச்சமும் அதிகரித்துவிட்டது.
இதுபோல் பல்வேறு காரணங்கள் ஒன்று சேர்ந்துவிட்டன. எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாகனங்களை விற்பனை செய்வது இயலாததாகி வருகிறது.ஒன்று, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்காத வாகனங்களை திரும்பப் பெற்று, வேறு நாடுகளில் விற்க முயற்சிக்க வேண்டும் அல்லது முகவர்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டும். இதுவே தற்போதைய நிலை.இருப்பினும், இது குறித்து, நீதிமன்றத்தில் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)