கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்! கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்! ... ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு! ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தையை சாய்த்த ஐந்து காரணிகள்:ரூ.7 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
01:31

மும்பை:இந்திய பங்குச் சந்தைகள், வரலாறு காணாத வீழ்ச்சியை நேற்று சந்தித்தன.மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, இதுவரை இல்லாத வகையில், 2,467 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில், 1941.67 புள்ளிகள் சரிந்து, 35634.95 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டி, வர்த்தகத்தின் இறுதியில், 538 புள்ளிகள் சரிவைக் கண்டு, 10451.45 புள்ளிகளில் நிலைபெற்றது. பல்வேறு பாதிப்புகள் ஒன்று சேர்ந்ததன் காரணமாக, பங்குச் சந்தைகள் பலத்த சரிவைக் கண்டன. முக்கியமாக, ஐந்து விஷயங்கள் காரணமாக அமைந்தன.கச்சா எண்ணெய்கச்சா எண்ணெய் விலை, சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது. சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் விலையை குறைப்பதாகவும், உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாகவும் அறிவித்தது.
இதையடுத்து, உலக எண்ணெய் சந்தையில், கச்சா எண்ணெய் விலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இது, இந்தியாவிலும் பிரதிபலித்தது. எரிசக்தி துறை பங்குகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., நிறுவன பங்குகள், 16 சதவீதம் வரையிலான சரிவைக் கண்டன.‘கொரோனா’ வைரஸ்உலகெங்கும், ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது, முதலீட்டாளர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, இந்த வைரஸ் தாக்குதலால், 178 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.யெஸ் பேங்க்யெஸ் பேங்க் சிக்கல்கள், இந்திய வங்கித் துறை மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பும் வகையில் அமைந்துள்ளதாக, முதலீட்டாளர்களும், நிபுணர்களும் கருதுகின்றனர்.
இது, உள்நாட்டு பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.அன்னிய முதலீடுகள்அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், தொடர்ந்து இந்திய சந்தையில் தங்கள் பங்குகளை அதிகளவில் விற்று வருகின்றனர்.கடந்த, 15 வர்த்தக தினங்களில் மட்டும் மொத்தம், 21 ஆயிரத்து, 937 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
கடந்த மாதம், 24ம் தேதி முதலே, இவர்கள் பங்குகளை விற்கத் துவங்கி விட்டனர்.உலக சந்தைகள்உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை குலைத்து வருகிறது. அதன் தாக்கமும் இந்திய பங்குச் சந்தைகளில் பிரதிபலித்தது.
ஒரு நாளில் இழப்பு
நேற்று ஒரு நாளில் மட்டும், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட, 7 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு, முந்தைய வர்த்தக தினமான, 6ம் தேதியன்று, 144.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; இது நேற்று, 137.47 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.
பங்குகள் விலை
நேற்றைய வர்த்தகத்தில், எஸ்.பி.ஐ., வங்கிப் பங்குகள், 6.5 சதவீதத்துக்கும் அதிகமாக விலை சரிந்தன. யெஸ் பேங்க் நிறுவனத்தின், 49 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக இவ்வங்கி தெரிவித்ததை அடுத்து, பங்குகள் விலை குறைந்தன.மாறாக, யெஸ் பேங்க் பங்குகள் விலை, 32 சதவீதத்துக்கும் மேலாக விலை உயர்வைக் கண்டன.
நேற்றைய வர்த்தகத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவன பங்குகள் அதிக விலை சரிவைக் கண்டன. இப்பங்குகள் விலை, 16 சதவீதம் சரிந்தது. இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் பேங்க், டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., – எஸ்.பி.ஐ., உள்ளிட்ட நிறுவனங்களும் அதிக பாதிப்பை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)