பதிவு செய்த நாள்
11 மார்2020
00:12
புதுடில்லி:பங்குச் சந்தைகளின் தொடர் சரிவு காரணமாக, சந்தை மதிப்பில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. முதலிடத்தை, டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பிடித்துள்ளது.
பங்குச் சந்தைகள் சரிவின் காரணமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை கடுமையான சரிவை சந்தித்தன. இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்து போனது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு குறைந்து போன நிலையில், டி.சி.எஸ்., இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
சரிவு
கடந்த திங்களன்று, சந்தை கடும் சரிவுக்கு ஆளான நிலையில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் பங்குகள் விலை, 6.88 சதவீதம் குறைந்து, ஒரு பங்கு விலை, 1,972.20 ரூபாய் என்ற நிலைக்கு வந்தது.இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7.40 லட்சம் கோடி ரூபாய் ஆனது.இதே சமயம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை, 12.35 சதவீதம் அளவுக்கு சரிந்து, ஒரு பங்கின் விலை, 1,113.15 ரூபாயாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை சரிவு இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த நவம்பரில், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டரை வாரங்களில், இந்நிறுவனத்தின் மதிப்பு, 27 சதவீதம் சரிந்தது.
மதிப்பு
இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7.06 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. எச்.டி.எப்.சி., பேங்க், 6.02 லட்சம் கோடி ரூபாயுடன் சந்தை மதிப்பில், மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது.ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், 4.62 லட்சம் கோடி ரூபாயுடன், நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|