கடலில், ‘கேபிள்’ பி.எஸ்.என்.எல்., பணி நிறைவு கடலில், ‘கேபிள்’ பி.எஸ்.என்.எல்., பணி நிறைவு ... ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ‘ஸ்டார்ட் அப்’ ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ‘ஸ்டார்ட் அப்’ ...
‘மைக்ரோசாப்ட்’ நிர்வாகக் குழுவிலிருந்து விலகினார் பில் கேட்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2020
00:07

சான் பிரான்சிஸ்கோ:பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான, ‘மைக்ரோசாப்ட்’டின் இணை நிறுவனரான, பில் கேட்ஸ், நிர்வாகக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். சமூக சேவைகளுக்கு அதிக நேரத்தை செலவிட விரும்புவதால், அவர் இந்த முடிவை எடுத்து உள்ளார்.


கடந்த, 10 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, அன்றாட செயல்பாட்டிலிருந்து விலகி, அவருடைய மனைவி மெலிண்டாவுடன் சேர்ந்து துவங்கிய அறக்கட்டளையில், தன் கவனத்தை திருப்பியிருந்தார்.இந்நிலையில், 64 வயதாகும் அவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்தும் விலகிவிட முடிவெடுத்து உள்ளார்.


கடந்த, 1975ம் ஆண்டில், பால்ய கால நண்பர், பால் ஆலென் என்பவருடன் இணைந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை துவக்கினார், பில் கேட்ஸ்.கடந்த, 2000மாவது ஆண்டில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை துறந்து, ஸ்டீவ் பல்மோர் வசம் நிறுவன பணிகளை ஒப்படைத்து, அறக்கட்டளை வேலைகளில் அதிக ஆர்வம் காட்டத் துவங்கினார். அவர், இந்நிறுவனத்தின் தலைவர் பதவியை, 2014ம் ஆண்டு ஆரம்பம் வரை வகித்து வந்தார்.


தன் பதவி விலகல்குறித்து விளக்கம் அளித்துள்ளார் பில்கேட்ஸ்:‘மைக்ரோசாப்ட் மற்றும் பெர்க்‌ஷயர் ஹாத்வே’ ஆகிய இரண்டு பொது நிறுவனங்களிலிருந்தும் விலகுவதாக முடிவெடுத்துஉள்ளேன். உலகளாவிய சுகாதாரம், மேம்பாடு, கல்வி மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் என் ஈடுபாடு அதிகரித்து வருவதால், அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி, அதிக நேரம் செலவழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)