பதிவு செய்த நாள்
15 மார்2020
00:07
சான் பிரான்சிஸ்கோ:பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான, ‘மைக்ரோசாப்ட்’டின் இணை நிறுவனரான, பில் கேட்ஸ், நிர்வாகக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். சமூக சேவைகளுக்கு அதிக நேரத்தை செலவிட விரும்புவதால், அவர் இந்த முடிவை எடுத்து உள்ளார்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, அன்றாட செயல்பாட்டிலிருந்து விலகி, அவருடைய மனைவி மெலிண்டாவுடன் சேர்ந்து துவங்கிய அறக்கட்டளையில், தன் கவனத்தை திருப்பியிருந்தார்.இந்நிலையில், 64 வயதாகும் அவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்தும் விலகிவிட முடிவெடுத்து உள்ளார்.
கடந்த, 1975ம் ஆண்டில், பால்ய கால நண்பர், பால் ஆலென் என்பவருடன் இணைந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை துவக்கினார், பில் கேட்ஸ்.கடந்த, 2000மாவது ஆண்டில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை துறந்து, ஸ்டீவ் பல்மோர் வசம் நிறுவன பணிகளை ஒப்படைத்து, அறக்கட்டளை வேலைகளில் அதிக ஆர்வம் காட்டத் துவங்கினார். அவர், இந்நிறுவனத்தின் தலைவர் பதவியை, 2014ம் ஆண்டு ஆரம்பம் வரை வகித்து வந்தார்.
தன் பதவி விலகல்குறித்து விளக்கம் அளித்துள்ளார் பில்கேட்ஸ்:‘மைக்ரோசாப்ட் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வே’ ஆகிய இரண்டு பொது நிறுவனங்களிலிருந்தும் விலகுவதாக முடிவெடுத்துஉள்ளேன். உலகளாவிய சுகாதாரம், மேம்பாடு, கல்வி மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் என் ஈடுபாடு அதிகரித்து வருவதால், அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி, அதிக நேரம் செலவழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|