பதிவு செய்த நாள்
15 மார்2020
23:53
கார்டு பரிவர்த்தனையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில், டெபிட் கார்டு
மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நெறிமுறைகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய நெறிமுறைகள் விபரம் வருமாறு:புதிதாக வழங்கப்படும் டெபிட் மற்றும் கிரெடிட்
கார்டுகள் அனைத்தும், உள்நாட்டு ஏ.டி.எம்., மையங்கள் மற்றும் பி.ஓ.எஸ்., டெர்மினல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாற்றி வழங்கப்படும் கார்டுகளுக்கும் இது பொருந்தும்.
‘ஆன்லைன்’ பரிவர்த்தனை, வெளிநாட்டு பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகள் தேவை எனில், வாடிகையாளர்கள் இது தொடர்பாக வங்கியை தொடர்பு கொண்டு தனியே விண்ணப்பிக்க வேண்டும். இந்த சேவைகள் இயல்பாக கார்டில் இடம்பெற்றிருக்காது.
வாடிக்கையாளர் கார்டை இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பினால், வங்கியிடம் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இடர் தன்மைக்கேற்ப வங்கிகள், தற்போதைய கார்டை ரத்து செய்து, புதிதாக விண்ணப்பிக்கலாம்.மேலும், வாடிக்கையாளர்கள் இதுவரை
ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கார்டை பயன்படுத்தியது இல்லை எனில், அந்த வசதியை செயலிழக்க செய்யும் உரிமை வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.கார்டில் குறிப்பிட்டவசதியை பெற அல்லதுசெயலிழக்க வைக்கவும் வாடிக்கையாளர்கள் கோரலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|