பதிவு செய்த நாள்
18 மார்2020
04:40
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் சரிவைக் கண்டன. வர்த்தகத்தின் துவக்கத்தில் ஏற்றத்தைக் கண்டபோதும், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புகள் காரணமாக, பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தினால், சந்தைகள் சரிவைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்ஆரம்பத்தில் ஏற்றத்தை கண்டபோதும், இறுதியில், 810.98 புள்ளிகள் சரிந்து, 30579.09 புள்ளிகளில் நிலைபெற்றது.இதே போல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ யும், 230.35 புள்ளிகள்சரிவை சந்தித்து, வர்த்தக இறுதியில், 8967.05 புள்ளிகளில் நிலைபெற்றது.சென்செக்ஸ் பிரிவில்அதிக இழப்பை, ஐ.சி.ஐ. சி.ஐ., பேங்க், இண்டஸ்ட்இண்ட் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் பேங்க், எச்.டி.எப்.சி., இன்போசிஸ், எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவனங்கள் சந்தித்தன.
மாறாக, எச்.யு.எல்., ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட், மாருதி, ஏஷியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள், விலை அதிகரித்தன.முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, வர்த்தகத்தின் துவக்கத்தில், விலை சகாயமாக இருந்ததை அடுத்து, வாங்க துவங்கினர். இதையடுத்து, சந்தை ஏற்றம் கண்டது. ஆனால், இந்த ஏற்றம்நீடிக்கவில்லை. கொரோனா அச்சம் மீண்டும் தலைதுாக்கிய நிலையில், சந்தைகள் கீழே இறங்கத் துவங்கின.
உலக சந்தைகளைப் பொறுத்தவரை நேற்று, ஷாங்காய், சியோல் ஆகிய நாடுகளின் சந்தைகள் சரிவைக் கண்டன. ஹாங்காங், டோக்கியோ சந்தைகள் ஏற்றம் கண்டன.ஐரோப்பிய சந்தைகள், வர்த்தகத்தின் துவக்கத்தில், 3 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன.நேற்று, இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து, 1 டாலருக்கு, 74.20 ரூபாயாக இருந்தது.பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, 1.06 சதவீதம் சரிந்து, 1 பேரலுக்கு, 29.73 டாலராக குறைந்தது.எகிறிய, ‘எஸ் பேங்க்’ஒருபக்கம் சந்தை சதிராடிக் கொண்டிருந்தாலும், யெஸ் பேங்க் பங்குகள் விலை, தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து வருகின்றன.
நேற்று மட்டும் இந்நிறுவன பங்குகள் விலை, 59 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டன. மூடிஸ் நிறுவனம், யெஸ் பேங்கின் தர மதிப்பீட்டை அதிகரிக்கவும், பங்குகளின் விலை உயர்ந்தன.நேற்று, இந்நிறுவனப் பங்கின் விலை, மும்பை பங்குச் சந்தையில், 58.65 ரூபாயாக அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையில், 59.29 சதவீதம் அதிகரித்து, வர்த்தக இறுதியில், 59.10 ரூபாயாக உயர்ந்தது.
யெஸ் பேங்க் பங்குகள், கடந்த மூன்று நாட்களில் மட்டும், 134 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மூன்று நாட்களில், 8,570 கோடி ரூபாயிலிருந்து, 14 ஆயிரத்து, 958 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|