வட்டி விகிதம் குறையும் ‘பிட்ச்’ நிறுவனம் கணிப்பு வட்டி விகிதம் குறையும் ‘பிட்ச்’ நிறுவனம் கணிப்பு ...  திருப்பூர் பின்னலாடை துறை  ‘கொரோனா’வால் கோடிகளில் இழப்பு திருப்பூர் பின்னலாடை துறை ‘கொரோனா’வால் கோடிகளில் இழப்பு ...
எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு பிப்ரவரியில் 5.2 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2020
03:42

புதுடில்லி: பங்குச் சந்தைகளில் அதிகளவிலான ஏற்ற, இறக்கங்கள் இருந்த நிலையிலும், மியூச்சுவல் பண்டு துறையில், எஸ்.ஐ.பி., எனும் தவணை திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள், பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளன.

இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ள தாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில், எஸ்.ஐ.பி., முறையில், 8,513 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது, கடந்த ஆண்டின், இதே பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 5.2 சதவீதம் அதிகமாகும்.

இம்மாதத்தில், 8,095 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பங்குச் சந்தைகளில், அதிக ஏற்ற, இறக்கங்கள் இருந்த நிலையிலும், எஸ்.ஐ.பி., மூலமான முதலீடுகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.நடப்பு நிதியாண்டின் முதல், 11 மாதங்களில், எஸ்.ஐ.பி., மூலமாக செய்யப்பட்ட முதலீடு, 91 ஆயிரத்து, 443 கோடி ரூபாய்.

இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 84 ஆயிரத்து, 638 கோடி ரூபாய், இத்திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டிருந்தது.பங்குச் சந்தை அபாயங்களை தவிர்க்கும் வகையில், சில்லரை முதலீட்டாளர்களின் முக்கிய தேர்வாக, எஸ்.ஐ.பி., முறை இருக்கிறது.இருப்பினும், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பிப்ரவரியில், முதலீடு சற்று குறைவாகவே உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், 8,532 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.மேலும், டிசம்பர் மாதத்தில், 8,518 கோடி ரூபாயும், நவம்பர் மாதத்தில், 8,273 கோடி ரூபாயும், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.பிப்ரவரி வரையிலான, கடந்த, 12 மாதங்களில், சராசரியாக, 8,200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இவை ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு திட்டங்களின் சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி மாதத்தில், 27.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, பிப்ரவரி இறுதியில், 27.23 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.இவ்வாறு, ஆம்பிதெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)