பதிவு செய்த நாள்
19 மார்2020
03:42
புதுடில்லி: பங்குச் சந்தைகளில் அதிகளவிலான ஏற்ற, இறக்கங்கள் இருந்த நிலையிலும், மியூச்சுவல் பண்டு துறையில், எஸ்.ஐ.பி., எனும் தவணை திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள், பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளன.
இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ள தாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில், எஸ்.ஐ.பி., முறையில், 8,513 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது, கடந்த ஆண்டின், இதே பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 5.2 சதவீதம் அதிகமாகும்.
இம்மாதத்தில், 8,095 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பங்குச் சந்தைகளில், அதிக ஏற்ற, இறக்கங்கள் இருந்த நிலையிலும், எஸ்.ஐ.பி., மூலமான முதலீடுகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.நடப்பு நிதியாண்டின் முதல், 11 மாதங்களில், எஸ்.ஐ.பி., மூலமாக செய்யப்பட்ட முதலீடு, 91 ஆயிரத்து, 443 கோடி ரூபாய்.
இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 84 ஆயிரத்து, 638 கோடி ரூபாய், இத்திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டிருந்தது.பங்குச் சந்தை அபாயங்களை தவிர்க்கும் வகையில், சில்லரை முதலீட்டாளர்களின் முக்கிய தேர்வாக, எஸ்.ஐ.பி., முறை இருக்கிறது.இருப்பினும், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பிப்ரவரியில், முதலீடு சற்று குறைவாகவே உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், 8,532 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.மேலும், டிசம்பர் மாதத்தில், 8,518 கோடி ரூபாயும், நவம்பர் மாதத்தில், 8,273 கோடி ரூபாயும், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.பிப்ரவரி வரையிலான, கடந்த, 12 மாதங்களில், சராசரியாக, 8,200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இவை ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு திட்டங்களின் சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி மாதத்தில், 27.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, பிப்ரவரி இறுதியில், 27.23 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.இவ்வாறு, ஆம்பிதெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|