பதிவு செய்த நாள்
19 மார்2020
03:48
தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க உலோகங்களின் வர்த்தக தொழில் பிரிவில், கரூர் வைஸ்யா வங்கி களமிறங்கி உள்ளது. ‘கொரோனா’ வைரஸ் தொற்றை சமாளிப்பதற்காக, வளரும் உறுப்பு நாடுகளுக்கு, 48 ஆயிரத்து, 250 கோடி ரூபாய் உதவியை, ஏஷியன் டெவலப்மென்ட் பேங்க் அறிவித்துள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை, அடுத்த காலாண்டில் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, வட்டி குறைப்பை அதிகரிக்க உதவும் வகையில், இந்த முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், பூட்டானில், சில்லரை விற்பனைக்கான, அதன் முதல் பெட்ரோல் நிலையத்தை துவக்கியது.நிதிச் சந்தைகளில் நிலவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இண்டஸ்இண்ட் பேங்க், அனைத்து வகைகளிலும் வங்கி வலுவாக இருப்பதாக தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|