பதிவு செய்த நாள்
20 மார்2020
04:26
புதுடில்லி: ‘கிரிசில்’ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில், செயல்சாரா இயக்குனராக பதவி வகித்து வரும் அருந்ததி பட்டாச்சார்யா, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ., வங்கியின், முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா, தற்போது கிரிசில் நிறுவனத்தில் செயல்சாரா இயக்குனராக உள்ளார். இந்நிலையில், இவர், ஏப்., 15ம் தேதியிலிருந்து, தன் பதவியிலிருந்து விலக இருப்பதாக, கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கிரிசில் தெரிவித்துள்ளதாவது:இன்னொரு நிறுவனத்தில், முழுநேர தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்ற இருப்பதால், தற்போது வகித்து வரும், செயல்சாரா இயக்குனர் பதவியை ராஜினாமா செய்வதாக, அருந்ததி பட்டாச்சார்யா தன்னுடைய ராஜினாமா கடிதத்தில்தெரிவித்துள்ளார்.
அவர் ராஜினாமா செய்வதற்கு, வேறு எந்த காரணங்களும் கிடையாது.இவ்வாறு கிரிசில் தெரிவித்துஉள்ளது.எஸ்.பி.ஐ., வங்கியின், முதல் பெண் தலைவராக பணியாற்றிய அருந்ததி பட்டாச்சார்யா, ஓராண்டு பதவிக் கால நீட்டிப்புக்கு பின், 2017ல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|