பதிவு செய்த நாள்
20 மார்2020
04:28
புதுடில்லி: ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின், நிர்வாகத் தலைவராக பதவி வகித்து வரும், என்.சந்திரசேகரன், ‘டாடா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின், 1 லட்சம் பங்குகளை, பொது சந்தையில் வாங்கி உள்ளார்.
இது குறித்து, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர், என்.சந்திரசேகரன், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின், 1 லட்சம் பங்குகளை சந்தையில் வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு பங்கின் சராசரி விலை, 249.15 ரூபாய் என்ற அடிப்படையில், இந்த 1 லட்சம் பங்குகளை அவர் வாங்கி உள்ளார். கடந்த, 16ம் தேதியன்று, அவர் இந்த பங்குகளை சந்தையில் வாங்கி உள்ளார்.இவ்வாறு, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த அச்சத்தால், பங்குச் சந்தைகளில் கடும் சரிவுகள் ஏற்பட்டு, பல பங்குகளின் விலை, 52 வார குறைவில் கிடைக்கின்றன. இதையடுத்து, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கிட்டத்தட்ட, 2.5 கோடி ரூபாயை, சந்திரசேகரன் முதலீடு செய்துள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|